உயர்வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன தப்பு ? - எல்லோரும் எல்லாமும் பெருக !

உயர்வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன தப்பு ? - எல்லோரும் எல்லாமும் பெருக !

உயர்சாதியினர் தமிழகத்தில் 14 விழுக்காடு இருக்கிறார்களாம், அவர்கள் தங்களுக்கு 14 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டதை கலைஞர் தலைமையிலான அரசு மறுத்துவிட்டது. பேசாமல் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி மொத்த இடமான 100 விழுக்காட்டையும் சாதி மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்துக் கொடுத்துவிடலாம்.

அப்படியே பிரிச்சு கொடுத்துட்டு அந்த ஒதுக்கீட்டில் எந்த மாணவனைத் தேர்ந்தெடுப்பது என்ற தலைவலியையும் அரசு வைத்துக் கொள்ளாமல் அதாவது கட் ஆப் மார்க் பற்றி யெல்லாம் அந்தந்த சாதிகளே தீர்மாணிக்க சாதிசங்கங்களின் முடிவுக்கு விட்டுவிடலாம்.

தற்போதைய ஒதுக்கீட்டு முறையில் மொத்தம் 4 பிரிவுகள் இருக்கிறது,

எஸ்ஸி / எஸ்டி - 19
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 20
பிற்படுத்தப்பட்டோர் - 30 விழுக்காடு
ஓப்பன் - 29 விழுக்காடு (கணக்கு சரியாக தெரியல, கொஞ்சம் கூட குறைவாகக் கூட இருக்கும்)

உயர்வகுப்பினர் வெறும் 14 விழுக்காடு தானே கேட்கிறார்கள், மீதம் இருக்கும் (29 மைனஸ் 14 ) 15 விழுக்காடும் அதே அடிப்படையில் பிரித்துக் கொடுத்தால்

எஸ்ஸி / எஸ்டி - 22
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 23
பிற்படுத்தப்பட்டோர் - 35 விழுக்காடு
உயர்வகுப்பு - 15 விழுக்காடு

என்று கணக்கு வந்துவிடும்......

இந்திய அளவில் இருக்கும் இந்திய அரசு வேலை / கல்விகளிலும் இட ஒதுக்கீட்டு முறை மாற்றப்பட வேண்டும். தற்போது வகுப்படிப்படையில் இருக்கும் ஒதுக்கீட்டை மாநில அடிப்படைக்கு மாற்றி அமைத்து அந்தந்த மாநில நிலவரப்படி ஒதுக்கீடு வழங்கவேண்டும். பல்வேறு மாநிலங்களில் சாதிப்பெயர் ஒன்றாக இருந்தாலும், மக்கள் நிலையும் வாழ்க்கைத் தரமும் வேறு. அதனால் இந்திய அளவில் மாநில அளவிலான இட ஒதுக்கீடே சரியான தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன்.

சேவகம் பண்ணுவதற்காக என்ற எந்த தனிப்பட்ட சாதியும் கிடையாது ஆகவே.....இருக்கும் சாதி மக்கள் தொகை அடிப்படையில் எல்லோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கினால் தான் சமத்துவம் நிலைநாட்டப்படும்.

உயர்வகுப்பினர்களும் படிக்க வேண்டுமே. அவர்களுக்கு இட ஒதுக்கீடே இல்லை என்றால் எப்படி ?

எல்லோரும் எல்லாமும் பெருக !

கோவி கண்ணன்

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி