Posts

Showing posts with the label பேரணி

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து தலித் சங்கர்ஷ சமிதி பேரணி

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து தலித் சங்கர்ஷ சமிதி சார்பாக பெங்களூருவில் இன்று தீப்பந்த பேரணி நடந்தது. தகவல் :- இரா வினோத் பிரேசர் டவுன் அம்பேத்கர் சிலையில் தொடங்கிய இந்த பேரணி அம்பேத்கர் சாலை வழியாக பெரியார் நகரில் உள்ள அம்பேத்கர் சிலையுடன் நிறைவடைந்தது.தோழர் மாவள்ளி சங்கர் தலைமையில் நடந்த இந்த பேரணியில் கன்னட தலித்துகள் பெரும்பான்மையாக பங்கேற்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் ஜெய்பீம் தோழர்கள் எழுப்பிய முழக்கங்கள் உணர்வு பூர்வமாக இருந்தது.சாதி,மத,மொழி இன பேதங்களை கடந்து எளிய மனிதர்களால் தான் மானுடத்தை உண்மையாக நேசிக்க முடியும் என்பதை மீண்டும் உணர்ந்து கொண்டேன்