Posts

Showing posts with the label இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 497 என்ன தான் சொல்கிறது

திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்?’ இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 497 என்ன தான் சொல்கிறது

மனைவியின் காதலனை கணவன் புகார் கொடுத்து தண்டிக்கமுடியும். ஆனால், கணவனின் காதலி மீது மனைவி புகார் கொடுத்து கணவனையும் தண்டிக்கமுடியாது; கணவனின் காதலியையும் தண்டிக்கமுடியாது. இதுதான், 497 சட்டப்பிரிவின் முரண்பாடு. அதாவது, இந்திய அரசிலைமைப்பு சட்டம் ஆர்ட்டிக்கிள்- 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. ஆர்டிக்கிள்-15  பாலின பாகுபாடு கூடாது என்கிறது. ஆர்ட்டிக்கிள்-21 தனிமனித பாதுகாப்பு, சுதந்திரத்தை வலியுறுத்துகிறது. இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூன்று உரைகற்களையும் வைத்து இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 497 உரசிப்பார்க்கும்போது… இச்சட்டப்பிரிவு தங்கம் இல்லை. பித்தளையாக பல்லிளிக்கிறது. இது, தெரியாமல் என்னமோ இப்போது 497 சட்டப்பிரிவை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தபிறகுதான், கணவன் மீது மனைவி புகார் கொடுக்கமுடியாது என்று நினைத்துக்கொண்டு சென்னை எம்.ஜி.ஆர். நகர் ஜான்பால் ஃப்ராங்ளின் என்பவர் திருமணத்தை தாண்டிய உறவை தொடர்வேன் என்று சொல்ல… இனி காவல்துறையால் ஒன்றும் செய்யமுடியாது என்று தவறாக நினைத்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் அவரது மனைவி புஷ்பலதா. ஆனால், குடும்ப வன்முறைச் சட...