சட்டத்துறையில் பேரறிஞராக திகழ்ந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஏன் நீதிபதியாகவில்லை?
சட்டத்துறையில் பேரறிஞராக திகழ்ந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஏன் நீதிபதியாகவில்லை? ≠==================≠ தகவல் :- திரு. கஜேந்திரன்,திருவள்ளுவர் நலச்சங்கம் , மும்பை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களே அதைப்பற்றி கூறுகிறார் "நான் தத்துவ இயலில் முனைவர் பட்டம் பெற்று, இங்கிலாந்திலிருந்து திரும்பினேன். அப்போது இந்தியாவில் யாருமே அந்த கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. நான் பம்பாய் சென்று ஒரு குக்கிராமத்தில் தங்கியிருந்த போது, யாருக்குமே நான் இருக்கும் இடம் தெரிந்திருக்கவில்லை. இருப்பினும், பம்பாய் அரசு கடும் முயற்சிக்குப் பிறகு என்னுடைய இடத்தைக் கண்டுபிடித்து, அரசியல் பொருளாதாரத் துறையின் பேராசியர் பதவியை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என என்னை அணுகியது. நான் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டேன். நான் அந்த வேலையை ஏற்றிருந்தால், குறைந்தது இயக்குநராகவாவது (Director of Education) ஆகியிருப்பேன். ஒரு மாதத்திற்குக் குறைந்தது மூன்று அல்லது நான்கு ஆயிரம் ரூபாய்களாவது எனக்கு ஊதியம் கிடைத்திருக்கும். என்னுடைய சமூகத்திற்காகப் பணியாற்ற வேண்டும் என்ற மாபெரும் உணர்வுதான் நான் அந்தப் ...