"கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை" - கைவிரித்த அணுசக்திக் கழகம்

"கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை" - கைவிரித்த அணுசக்திக் கழகம்

இங்கே நாம் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கூடங்குளம் போராட்டம் நடந்தபோது, கூடங்குளத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் அணுக்கழிவுகளை உருண்டையாக உருட்டி வீடுகளில் வைத்துக் கொள்ளலாம் என்று பதில் சொன்னார்கள். மேலும், இது மூன்றாம் தலைமுறை அணு உலை, எந்தப் பிரச்னையும் கிடையாது, எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி, போராடும் மக்கள் அனைவரையும் தேச விரோதிகளாகச் சித்திரித்தனர். இன்று தேசிய அணுமின் கழகமே முன்வந்து எங்களிடம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இல்லை என்று சொல்லியிருக்கிறது. இதுதான் வேதனை தருவதாக இருக்கிறது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் அணுசக்திக் கழகம் கால அவகாசம் கோரியிருப்பதை மறுத்து பூவுலகின் நண்பர்கள் சார்பாக, `இவர்களிடம் அணுக்கழிவுகளை கையாளும் முறை முழுமையாக இல்லை. இவர்கள் 5 வருடங்களில் எப்படிக் கட்டுவார்கள் என்றும் நம்ப முடியாது. ஒவ்வோர் ஆண்டும் கூடங்குளம் இயங்கினால் அணுக்கழிவுகள் கூடிக்கொண்டே போகும். அதனால், கூடங்குளத்தில் 1 மற்றும் 2-ம் அலகின் உற்பத்தியை நிறுத்த வேண்டும். அணுக்கழிவு மேலாண்மை கட்டமைப்புகளை அமைத்த பிறகு கூடங்குளத்தை அணுசக்திக் கழகம் இயக்கிக் கொள்ளட்டும்' என்று தெரிவித்தோம். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், `கடந்த 5 ஆண்டுகள் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அணுசக்திக் கழகம் என்னென்ன செய்திருக்கிறது, இனிமேல் என்ன செய்யப்போகிறது என்பதைப் பற்றி தெளிவான அறிக்கையை ஜூலை மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
விரிவான தகவலுக்கு
https://www.vikatan.com/amp/news/coverstory/128145-we-do-not-have-technology-to-handle-nuclear-waste-says-nuclear-power-corporation.html?__twitter_impression=true

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி