மும்பை Mumbaī
மும்பை मुंबई Mumbaī
முன்னர் பம்பாயாக இருந்த மும்பை இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான இந்த நகரம், ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் மிக அதிக மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவதாக விளங்குகிறது.[1] நவி மும்பை மற்றும் தாணே ஆகிய அருகிலுள்ள புறநகரங்களுடன், ஏறத்தாழ 19 மில்லியன் மக்களுடன் மும்பை ஐக்கிய நாடுகள் அவையின் உலக நகரமயமாக்கல் திட்ட அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய நகர்ப்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சியாக உள்ளது .[2] இந்தியாவின் கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை, ஓர் ஆழமான இயற்கை துறைமுகம். இந்தியா கையாளும் கடல்வழி சரக்கு வணிகத்தில் மும்பை துறைமுகம் ஏறத்தாழ 60% பங்களிக்கிறது.[3]
கிமு மூன்றாம் நூற்றாண்டில், மௌரியப் பேரரசு மும்பையின் ஏழு தீவுகளை இந்து மற்றும் புத்த பண்பாட்டின் மையமாக மாற்றியது. பின்னர், போர்ச்சுகீசியர்களும் அவர்களைத் தொடர்ந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனமும் குடியேறுவதற்கு முன்னர் அந்த தீவுகள் வெற்றிபெற்ற உள்நாட்டு பேரரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவை ஒருங்கிணைக்கப்பட்டு, இந்நகரம் பம்பாய் என்று பெயரிடப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் நடுவில், இது ஒரு முக்கிய வணிக நகரமாக உருவானது. 19ஆம் நூற்றாண்டின் போது பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சி நிலைகள் இந்நகரை பெருமைப்படுத்தின. 20ஆம் நூற்றாண்டின் போது, இது இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வலிமையான தளமாகவும், ரௌல்த் சத்தியாகிரகத்தின் மற்றும் அரசரின் இந்திய கப்பற்படை கலகத்தின் வரலாற்று மையமாகவும் இது விளங்கியது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற போது, இந்நகரம் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1960ல், சம்யுக்தா மகாராட்டிரா போராட்டத்தைத் தொடர்ந்து, பம்பாயை தலைநகரமாக கொண்டு மகாராட்டிரம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. 1996ல், பம்பாய் மும்பை என்று பெயர் மாற்றப்பட்டது.[4]
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்[5] 5% பங்களித்தும், தொழில்துறை உற்பத்தியில் 25% பங்களித்தும், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு கடல்வழி வாணிபத்தில் 40 விழுக்காடும், மூலதன பரிமாற்றத்தில் 70 விழுக்காடும் அளித்து இந்தியாவின் வணிக மையமாக மும்பை விளங்குகிறது.[6] இந்திய ரிசர்வ் வங்கி, மும்பை பங்குச்சந்தை, இந்திய தேசிய பங்குச்சந்தை போன்ற முதன்மை நிதி அமைப்புகளுக்கு மையமாக விளங்கும் மும்பை, பல்வேறு இந்திய நிறுவனங்களின் மற்றும் கணக்கிடுதற்கரிய பன்னாட்டு நிறுவனங்களின் பெருநிறுவன தலைமையிடமாகவும் இது விளங்குகிறது. இந்நகரம் பாலிவுட் என்றழைக்கப்படும் இந்தி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொழில்துறையையும் உட்கொண்டிருக்கிறது. மும்பையின் வியாபார வாய்ப்புகளும், ஒரு சிறந்த வாழ்க்கை தரத்தை அளிக்கக்கூடிய எதிர்பார்ப்புகளும் இந்தியாவின் பிற மாநில மக்களையும் ஈர்க்க கூடியதாக உள்ளது, இதன் விளைவாக, இது இந்நகரை பல்வேறு சமூகங்கள் மற்றும் பண்பாட்டுக் கலவையாக மாற்றியுள்ளது.
பாரம்பரிய ஆங்கில பெயரான Bombay என்பது, "நல்ல வளைகுடா" என்ற ஒரு போர்ச்சுகீசிய சொல்லில் இருந்து பெறப்பட்டது என்று ஒரு பரவலான விளக்கத்தைக் கொண்டிருக்கிறது. bom (masc.) என்பது போர்ச்சுகீசியத்தில் "நல்ல" என்றும், ஆங்கிலத்தில் "bay" என்ற வார்த்தை, போர்ச்சுகீசியத்தில் baía (பழைய உச்சரிப்புகளில் fem., bahia )என்ற வார்த்தைக்கு இணையானது என்ற உண்மையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. "நல்ல வளைகுடா" என்பதற்கான பொதுவான போர்ச்சுகீசிய சொல் boa bahia என்பதாகும், இன்னும் தெளிவாக கூறுவதானால் bom bahia என்பது இலக்கண முறைப்படி தவறு.எவ்வாறிருப்பினும், 16ஆம் நூற்றாண்டு போர்ச்சுகீசியத்தில் "சிறிய வளைகுடா" என்பதற்கு baim (masc) என்ற வடிவத்தைக் கண்டறிய முடிகிறது.[9]
போர்ச்சுகீசிய பெயராய்வான Bombaim மிற்கு பல்வேறு வகையான மூலங்களை பிற ஆதாரங்கள் கொண்டிருக்கின்றன. José Pedro Machado's Dicionário Onomástico Etimológico da Língua Portuguesa ("போர்ச்சுகீஸ் டிக்சனரி ஆப் ஓனோமாஸ்டிக்ஸ் அண்டு எடிமோலொஜி") 1516 முதல், அவ்விடத்திற்கான முதல் போர்ச்சுகீசிய குறிப்பீடு என்னவாக இருந்திருக்கும் என்பதை, Benamajambu அல்லுத Tena-Maiambu [14] என்று குறிப்பிடுகிறது, Maiambu என்பது இந்து பெண் தெய்வமான மும்பா-தேவியைக் குறிப்பதாக தெரிகிறது என்று இது குறிப்பிடுகிறது. இதற்காகவே இவ்விடம் மராத்தியில் (மும்பை) பெயரிடப்பட்டுள்ளது. அதே நூற்றாண்டில், எழுத்துக்கள் Mombayn (1525)[15] என்றும், Mombaim (1563) என்றும் உருவாகி இருப்பதாக தெரிகிறது.[16] காஸ்பர் கோரியாவால் அவரின் Lendas da Índiaல் (லெஜெண்ட்ஸ் ஆப் இந்தியா)[17], இறுதி வடிவமான Bombaim 16 நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாகிறது என்று குறிப்பிடுகிறார். போர்ச்சுகீசிய பெயராய்வின் ஒரு பகுதியாக பெயர்ச்சொல் (bahia , "bay") இருந்ததைக் குறிப்பிட்டும், ஆங்கிலேயர்களால் தலைமையேற்கப்பட்ட அந்த இடத்தில் ஒரு வளைகுடா இருந்ததைப் போர்ச்சுகீசிய ஆதாரங்கள் குறிப்பிட்டு காட்டுவதை எடுத்துக்காட்டியும், இதனால் ஆங்கிலத்தில் கூறப்படும் Bombay என்பது போர்ச்சுகீசியத்தில் இருந்து பெறப்பட்டது என்று உறுதியாக வலியுறுத்துவதன் மூலம் இந்த "Bom Bahia" பகுப்பாய்வை ஜெ.பி. மசாடோ நிராகரிப்பதாக தெரிகிறது.[18]
முகலாயப் பேரரசின் உமாயூன், குசராத் சுல்தானிய பேரரசின் சுல்தான் பகதூர் சா ஆகியோரிடம் வளர்ந்து வந்த அதிகார உணர்வானது, 1534 டிசம்பர் 23ல் போர்ச்சுகீசிய குடியேற்றக்காரர்களுடன் பேசின் உடன்படிக்கை செய்து கொள்ள கட்டாயப்படுத்தியது. அந்த உடன்படிக்கையின்படி, பம்பாயின் ஏழு தீவுகளும், அருகில் இருந்த மூலோபாய நகரான பேசினும், அதை சார்ந்திருந்தவையும் போர்ச்சுகீசியர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த பிரதேசங்கள் பின்னர் 1535 அக்டோபர் 25ல் திருப்பி அளிக்கப்பட்டன. போர்ச்சுகீசியர்கள் பம்பாயில் தங்களின் ரோமன் கத்தோலிக்க மத ஒழுக்கங்களுக்கு அடித்தளமிடுவதிலும், வளர்ப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். மாகிமில் உள்ள புனித மிக்கேல் தேவாலயம், ஆந்திரியில் உள்ள புனித யோவான் பாப்டிசுட்டு தேவாலயம், பாந்த்ராவில் உள்ள புனித ஆண்ட்ரூ தேவாலயம் போன்ற பழமை வாய்ந்த சில தேவாலயங்கள் போர்ச்சுகீசிய காலத்தில் உருவக்கப்பட்டவையாகும்.[29] 1661 மே மாதத்தில், இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸூக்கும், போர்ச்சுகல்லின் அரசர் நான்காம் சானின் மகள் பிரகன்சாவின் கத்தரீனுக்கும் ஏற்பட்ட திருமண ஒப்பந்தத்தில் சார்லஸிற்கான கேத்ரினின் வரதட்சணையாக இந்த தீவுகள் பிரித்தானியப் பேரரசிற்கு வழங்கப்பட்டது.[30][31] இந்த தீவுகள், 1668 மார்ச் 27ன் ராயல் மசோதாவால் ஆண்டுக்கு £10 என்ற அடிப்படையில் 1668ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் ஏலத்தில் எடுத்து கொண்டது.[32] 1661ல் 10,000ஆக இருந்த மக்கள்தொகை 1675ல் 60,000ஆக விரைவாக அதிகரித்தது.[33] 1687ல், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையிடத்தை சூரத்தில் இருந்து பம்பாய்க்கு மாற்றியது.இறுதியாக இந்நகரம் பம்பாய் பிரசிடெண்சியின் தலைமையிடமாக மாறியது.[34] மாற்றத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து நிறுவனங்களின் தலைமையிடமாக பம்பாய் உருவாக்கப்பட்டது.[35] 17 நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முகலாயர்களின் தாக்குதல்களால் இந்த தீவுகள் மிகவும் பாதிக்கப்பட்டன.[36]
1782 முதல், அனைத்து ஏழு தீவுகளையும் ஒரே ஒருங்கிணைப்பில் கொண்டு வரும் நோக்கில், இந்நகரம் பெரியளவிலான கட்டுமான பொறியியல் திட்டங்களுடன் மறுவடிவம் பெற்றது. ஹார்ன்பி வெல்லார்டு என்று அறியப்பட்ட இந்த திட்டம், 1784ல் முடிக்கப்பட்டது.[37] 1853 ஏப்ரல் 16ல், பம்பாய்க்கும் அதன் அருகில் இருக்கும் தானேவுக்கும் இடையில் இந்தியாவின் முதல் பயண ரயில்பாதை ஏற்படுத்தப்பட்டது.[38] அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் (1861–1865) போது, இந்நகரம் உலகின் முக்கிய பருத்தி வியாபார சந்தையாக விளங்கியது, இதனால் ஏற்பட்ட பொருளாதார அபிவிருத்தி, நகரத்தின் வளர்ச்சியையும் கணிசமாக உயர்த்தியது.[39] 1869ல் திறக்கப்பட்ட சுயஸ் கால்வாய், அரேபிய கடலில் உள்ள மிகப்பெரிய கடற்துறைமுகங்களில் ஒன்றாக பம்பாயை மாற்றியது.[40]
1896 செப்டம்பரில், பம்பாய் ஒரு கொடூரமான பிளேக் தொற்றுநோயால் தாக்கப்பட்டு, அதில் வாரத்திற்கு 1,900 மக்கள் இறந்ததாக கணக்கிடப்பட்டது.[41] சுமார் 850,000 மக்கள் பம்பாயை விட்டு வெளியேறினார்கள். ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.[42] பம்பாய் பிரசிடெண்சியின் தலைநகரம் என்ற வகையில் 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் மற்றும் 1946ல் ராயல் இந்திய கப்பற்படை கலகம் ஆகியவற்றுடன் இந்திய சுதந்திர போராட்டத்திற்கும் பம்பாய் பிரதான சாட்சியாக இருந்தது.[43][44] 1947ல் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர், பம்பாய் ராஜதானி ஆட்சியின் பிரதேசம் இந்தியாவால் கைப்பற்றப்பட்டு பம்பாய் மாநிலம் என்று மறுகட்டுமானம் செய்யப்பட்டது. இந்திய பிரதேசத்தில் முந்தைய அரசாட்சி மாநிலங்கள் பல சேர்ந்த பின்னர் அவை பம்பாய் மாநிலத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன, இதனால் பம்பாய் மாநிலத்தின் பரப்பளவும் அதிகரித்தது. அதை தொடர்ந்து, இந்நகரம் பம்பாய் மாநிலத்தின் தலைநகராக மாறியது.[45] 1950 ஏப்ரலில், பம்பாய் புறநகர்கள் மற்றும் பம்பாய் நகரம் ஆகியவற்றின் இணைப்புடன் பரந்த பம்பாய் மாவட்டம் உயிர் பெற்றது.[46]
1955 மக்களவை விவாதத்தில், இந்நகரம் ஒரு தன்னாட்சி நகர-மாநிலமாக அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.[47] 1956ல், பம்பாயை தலைநகராக கொண்டு மஹாராஷ்டிரா-குஜராத் என்கிற இருதரப்பு மாநிலம் அமைக்க மாநிலங்களின் மறுசீரமைப்பு குழு பரிந்துரைத்தது. முன்னனி குஜராத்திய தொழில்துறையினரைக் கொண்ட ஓர் ஆலோசனை குழுவான பம்பாய் குடிமக்கள் குழு பம்பாயின் சுயாட்சியைக் கோரியது.[48] 1957 தேர்தல்களில், இந்த கோரிக்கைகளை எதிர்த்த சம்யுக்த மஹாராஷ்டிர இயக்கம், பம்பாயை மஹாராஷ்டிராவின் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.[49] இந்த இயக்கத்தின் போராட்டங்களைத் தொடர்ந்து (இதில் 105 மக்கள் போலீசால் கொல்லப்பட்டனர்), 1960 மே 1ல் பம்பாய் மாநிலம் மொழிவாரியாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது.[50] பம்பாய் மாநிலத்தின் குஜராத்தி பேசிய பகுதிகள் குஜராத் மாநிலமாக பிரிக்கப்பட்டது.[51] பம்பாயை தலைநகராக கொண்டு மராத்தி பேசிய பம்பாய் மாகாணத்தின் பகுதிகள், மத்திய மாகாணங்கள் மற்றும் பெரரில் இருந்து எட்டு மாவட்டங்கள், ஐதராபாத் மாநிலத்தில் இருந்து ஐந்து மாவட்டங்கள் மற்றும் அவர்களுக்கு இடையில் இணைந்திருந்த பல அரசாட்சி மாநிலங்களும் இணைக்கப்பட்டு மஹாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்டது.[52]
1992-93ல் ஏற்பட்ட ஹிந்து-முஸ்லீம் கலகங்கள், நகரத்தின் பாதுகாப்பான ஜவுளித்துறையை கிழித்து போட்டது. அதில் 1,000த்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.[53] 1993 மார்ச் 12ல், இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் பம்பாய் நிழலுகத்தால் நகரத்தின் முக்கிய பல பகுதிகளில் வெடிக்க செய்யப்பட்ட 13 தொடர் குண்டுவெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டனர், 700 பேர் காயமடைந்தனர்.[54] 2006ல், நகர பயண ரயில்களில் ஏழு குண்டுகள் வெடித்ததில், 209 பேர் கொல்லப்பட்டனர், 700க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.[55] 2008 நவம்பர் 26ல் இருந்து 2008 நவம்பர் 29 வரை ஆயுதந்தாங்கிய துப்பாக்கியாளர்களால் 10 ஒருங்கிணைந்த தொடர் பயங்கரவாத தாக்குதல்களில் 164 பேர் கொல்லப்பட்டனர், 308 பேர் காயமடைந்தனர், மேலும் பல முக்கிய கட்டிடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.[56]
பாட்சா அணைக்கு அப்பாற்பட்டு, விகார், கீழ் வைட்டர்னா, மேல் வைட்டர்னா, துளசி, தான்சா மற்றும் பவாய் போன்ற அங்கு ஆறு முக்கிய ஏரிகள் உள்ளன. இவற்றில் இருந்தே நகரத்திற்கு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.[62][63] துளசி ஏரி மற்றும் விகார் ஏரி இரண்டும் மாநகர எல்லைக்குள் போரிவில்லி தேசிய பூங்காவில் அமைந்துள்ளன.[64] நகர எல்லைக்குள் அமைந்துள்ள பவாய் ஏரியின் வினியோகம் விவசாயம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது.[65] தகிசார் ஆறு, போயின்சார் (அல்லது போய்சார்) மற்றும் ஒசிவாரா (அல்லது ஒகிவாரா) ஆகிய மூன்று சிறிய ஆறுகளும் பூங்காவிற்கு உள்ளிருந்தே உருவாகின்றன. மாசு நிறைந்த மீதி ஆறு துளசி ஆறில் இருந்து உருவாகி, விகார் மற்றும் பவாய் ஏரிகளில் நிரம்பிய மீத நீருடன் கலக்கிறது.[66] நகரத்தின் கடற்கரை பகுதி பல சமவெளிகள் மற்றும் மேடுபள்ளங்களுடன் ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளது. அது கிழக்கில் தாணே கிரீக்கில் இருந்து மேற்கு முகப்பில் மத் மார்வே வரை நீண்டுள்ளது. [67] சால்செட்டின் கிழக்கு கடற்கரை பெருமளவிலான சதுப்புநிலக் காடுகள் மற்றும் உயிரிமாற்றீட்டு வளங்களையும் கொண்டுள்ளது. மேற்கத்திய கடற்கரையில் பெருமளவில் வண்டலும், பாறைகளும் நிரம்பியுள்ளன.[68]
கடல் அருகில் இருக்கும் காரணத்தால், நகர பகுதியில் இருக்கும் மண் வளமான வண்டல்மண்ணாக உள்ளது. புறநகர் பகுதிகளில், மண் மேற்புரம் பெருமளவில் வண்டல்கள் மற்றும் கரிசல்களால் நிரம்பியுள்ளது. அப்பிராந்தியத்தின் அடிமட்ட பாறைகள், கருப்பு டெக்கான் திடக்குழம்பு கலவையால் ஆனவை. அவற்றின் அமில மற்றும் அடிப்படை மாறிகள் கிறிட்டேசியஸூக்கு பிந்தைய மற்றும் யூசினின் ஆரம்ப காலத்தியவை ஆகும்.[66] மும்பை ஒரு நிலஅதிர்வுக்குரிய மண்டலத்தில் அமைந்துள்ளது.[69] அதன் சுற்றுவட்டத்தில் மூன்று அபாயக் கோடுகளைக் கொண்டுள்ளது. இந்த பகுதி ஒரு நிலஅதிர்வுக்குரிய மூன்றாம் மண்டல பகுதி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது 6.5 ரிக்டர் அளவு வரையிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பது இதன் பொருளாகும்.7}[70]
மார்ச் மற்றும் அக்டோபருக்கு இடைப்பட்ட ஈரப்பதமான பருவநிலையில் அதிகளவிலான ஈரப்பதமும், 30 °C (86 °F) மேற்பட்ட வெப்பநிலையும் நிலவும். ஜூன் மற்றும் செப்டம்பருக்கு இடையில், நகரையே பாழாக்கும் மழைகாலமாக இருக்கும். அம்மாதங்களுக்கு இடையில் தான் நகரத்தின் ஆண்டு மழையளவான 1,800 millimetres (70.9 in) கிடைக்கிறது, சராசரி அளவான 600 millimetres (23.6 in) ஜூலையில் ஒரே மாதத்தில் பூர்த்தி செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஆண்டு மழையளவாக 1954ல் 3,452 millimetres (135.9 in)என்ற அளவு பதிவு செய்யப்பட்டது.[66] ஒருநாள் அதிகபட்ச மழையளவு 944 millimetres (37.17 in) 2005 ஜூலை 26ல் பதிவு செய்யப்பட்டது.[71] நவம்பர் மற்றும் பிப்ரவரிக்கு இடைப்பட்ட உலர்வு காலமானது, மிதமான ஈரப்பதம் மற்றும் மிதமான குளிர்ச்சி பொருந்திய காலநிலையாக விளங்குகிறது. வடக்கிலிருந்து வரும் குளிர்ந்த காற்றால் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் இதமான குளிர் தென்றல் கிடைக்கிறது.[72] தினசரி குறைந்தபட்சம் 16.4 °C (61.5 °F) உடன், ஓர் ஆண்டில் ஜனவரி மாதமே மிக குளிர்ச்சி மிக்க மாதமாக இருக்கிறது.[73]
ஆண்டு வெப்பநிலைகள் உயர்ந்தளவாக 38 °C (100 °F) லிருந்து குறைந்தபட்சமாக 12 °C (54 °F) வரை மாறுபடுகிறது.[72] இதுவரையிலான அதிகபட்ச அளவு 43.3 °C (109.9 °F) மற்றும் குறைந்தபட்ச அளவு 7.4 °C (45.3 °F) ஆகும்.[74]
40 பில்லியன் (US$) பங்கு வகிக்கிறது.[76] மும்பையின் ஓர் ஆண்டுக்கான தனிநபர் வருமானம்
48954 (US$) ஆகும். இது தேசிய சராசரியை விட ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகமாகும்.[77] பாரத ஸ்டேட் வங்கி, எல்ஐசி, டாடா குழுமம், கோத்ரேஜ் மற்றும் ரிலையன்ஸ் உட்பட இந்தியாவின் எண்ணற்ற பல பெருநிறுவனங்களும், பார்ச்சூன் குளோபல் 500 நிறுவனங்களில் ஐந்தும் மும்பையில் அமைந்துள்ளன.[78] பல்வேறு வெளிநாட்டு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இந்த பகுதிகளில் கிளைகளைக் கொண்டுள்ளன, இதில் சர்வதேச வர்த்தக மையம் (மும்பை) மிக முக்கியமான ஒன்றாகும்.[79] 1980 வரை, ஜவுளித்துறை ஆலைகள் மற்றும் கடல் துறைமுகத்திற்காகவே மட்டுமே மும்பை பெருமளவில் சிறப்பு பெற்று விளங்கியது, ஆனால் அதன் பின்னர் பொறியியல், வைரம் மெருகூட்டல், ஆரோக்கியகவனிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை உள்ளடக்க திருப்பி விடப்பட்டுள்ளது.[80]
நகரத்தின் தொழிலாளர்களில் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் சதவீதத்தில் உள்ளனர். மும்பை பெருமளவிலான தொழிற்திறனற்ற மற்றும் சிறிதே தொழில்திறன் பெற்ற தொழிலாளர்களையும் பெருமளவில் கொண்டுள்ளது. இவர்கள் தெருவியாபாரிகளாகவும், டாக்சி ஓட்டுனர்களாகவும், மெக்கானிக்குகளாகவும் மற்றும் நீல காலர் பணிகளில் இருப்பவர்களாகவும் தங்கள் வாழ்க்கைக்காக சம்பாதிக்கிறார்கள்.[81] துறைமுகம் மற்றும் கப்பல் தொழில்துறையானது, இந்தியாவில் உள்ள மிக பழமை வாய்ந்த மற்றும் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான மும்பை துறைமுகத்துடன் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.[82] மத்திய மும்பையில் உள்ள தாரவியில், ஒரு பெரிய மறுசுழற்சி தொழிற்துறை உள்ளது, இது நகரத்தின் பிற பகுதிகளில் இருந்தும் கழிவுகளை மறுசுழற்சி செய்து வருகிறது. இந்த மாவட்டம் 15,000 ஒரே-அறை தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.[83]
இந்தியாவின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் செயற்கோள் வலையமைப்புகளின் பெரும்பான்மையும், அத்துடன் அவற்றின் முக்கிய பிரசுரங்களும் மும்பையைத் தலைமையிடமாக கொண்டுள்ளன. இந்தி திரைப்பட தொழிற்துறையின் மையமான பாலிவுட், இந்தியாவில் அதிகளவிலான படங்கள் தயாரிப்பு துறையாகவும், உலகின் மிகப்பெரியவற்றில் ஒன்றாகவும் விளங்குகிறது.[84][85][86] இந்தியாவின் மீதப்பகுதிகளுடன், வர்த்தக தலைமையிடமான மும்மை, 1991ன் தாராளமயமாக்கலில் இருந்தும், 90களின் மத்தியில் ஏற்பட்ட நிதி வளர்ச்சியில் இருந்தும், 2000த்தில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பம், ஏற்றுமதி, சேவைகள் மற்றும் அவுட்சோர்சிங் வளர்ச்சியில் இருந்தும் ஒரு பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது.[87] உலகளாவிய மையங்களுக்கான 2008 வர்த்தக குறியீட்டில் மும்பை 48வது இடத்தைப் பிடித்துள்ளது.[88] 2008 ஏப்ரலில், போர்ப்ஸ் இதழால்[89] வெளியிடப்பட்ட "பில்லினியர்களின் முதல் பத்து நகரங்கள்" பட்டியலில் மும்பை ஏழாவது இடத்தைப் பிடித்தது, ஆனால் பில்லினியர்களின் சராசரி வளங்களில், இந்த பத்து நகரங்களில் மும்பை உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது.[90]
ஓர் ஐபிஎஸ் அதிகாரியான போலீஸ் கமிஷனர் ஒருவர் மும்பை போலீஸ் துறைக்கு தலைமை வகிப்பார். மும்பை போலீஸ் மாநிலத்தின் உள்துறை இலாக்காவின் கீழ் வருகிறார்.[102] துணை போலீஸ் கமிஷனர்களின் தலைமையில் நகரம் ஏழு போலீஸ் மண்டலங்களாகவும், பதினேழு போக்குவரத்து போலீஸ் மண்டலங்களாகவும்[103] பிரிக்கப்பட்டுள்ளது.[104] போக்குவரத்து போலீஸ் என்பது மும்பை போலீஸ் துறையின் கீழ் பாதி-தன்னாட்சி பெற்ற சுய அமைப்பாக செயல்படுகிறது. மும்பை தீயணைப்பு துறை முதன்மை தீயணைப்பு அதிகாரியின் தலைமையின் கீழ் செயல்படுகிறது. இவரின் கீழ் நான்கு துணை முதன்மை தீயணைப்பு அதிகாரிகளும், ஆறு பிராந்திய அதிகாரிகளும் இருக்கிறார்கள்.[103]
பம்பாய் உயர்நீதிமன்றத்தின் இருப்பிடமாகவும் மும்பை விளங்குகிறது. பம்பாய் உயர்நீதிமன்றம் மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளான தமன் மற்றும் தியூ மற்றும் தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆகியவற்றின் சட்ட பிரச்சனைகளைக் கவனிக்கிறது.[105] இரண்டு கீழ் நீதிமன்றங்களான, உள்ளூர் விஷயங்களுக்கான சிறு பிரச்சனை நீதிமன்றம் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கான குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றையும் மும்பை கொண்டிருக்கிறது.[106] நகரத்தில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் மற்றும் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கும் மக்களுக்கான ஒரு சிறப்பு தடா (பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள்) நீதிமன்றமும் மும்பையும் உள்ளது.[107]
இந்திய தேசிய நெடுஞ்சாலை முறையின் தேசிய நெடுஞ்சாலை 3, தேசிய நெடுஞ்சாலை 4 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 8 ஆகியவற்றால் மும்பை பயன்பெற்று வருகிறது.[112] மும்பை-வோடோதரா விரைவு நெடுஞ்சாலை கட்டப்பட்டு வரும் நிலையில்,[113] மும்பை-புணே விரைவு நெடுஞ்சாலை தான் இந்தியாவில் இதுவரை கட்டப்படாத வகையிலான முதல் விரைவு நெடுஞ்சாலை ஆகும்.[114]
மும்பை இரண்டு ரெயில்வே மண்டலங்களின் தலைமையிடமாக விளங்குகிறது: சத்ரபதி சிவாஜி டெர்மினஸை[108] மையமாக கொண்ட மத்திய ரெயில்வே மற்றும் சர்ச்கேட்டிற்கு அருகில் தலைமையிடத்தைக் கொண்ட மேற்கத்திய ரெயில்வே.[115] நகர போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் மும்பையின் புறநகர் ரெயில்வே, வடக்கு-தெற்கு திசையில் நகரத்தின் நீளத்திற்கு மூன்று தனித்தனி வலையமைப்புகளைக் கொண்டுள்ளது.[81]
ஓர் தரையடி மற்றும் மேற்புற விரைவு போக்குவரத்து முறையான மும்பை மெட்ரோ தற்போது கட்டமைக்கப்பட்டு வருகிறது.[116] மும்பை மோனோரெயில் முடிக்கப்படும் போது, அது ஜேகப் வட்டத்தில் இருந்து வடாலா வரை ஓடும்.[117] இந்திய ரெயில்வேயினால் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் மும்பையுடன் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளன. சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், தாதர், லோக்மானிய திலகர் டெர்மினஸ், மும்பை சென்ட்ரல், பாந்த்ரா டெர்மினஸ் மற்றும் ஆந்த்ரி ஆகிய இடங்களில் இருந்து ரெயில்கள் புறப்படுகின்றன.[118] மும்பையின் புறநகர் ரெயில் போக்குவரத்து நாளொன்றுக்கு 6.3 மில்லியன் மக்களை ஏற்றி செல்கிறது.[119] http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88&action=edit§ion=7 BESTயினால் ஓட்டப்படும் பொதுபோக்குவரத்து பேருந்துகள் மாநகரத்தின் பெரும் பகுதிகளை இணைக்கின்றன. அத்துடன் நவி மும்பை, மிரா-பயந்தர் மற்றும் தானே ஆகியவற்றின் சில பகுதிகளையும் இணைக்கின்றன.[120] நீண்ட தூர பயணங்களுக்கு ரெயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால்,[81] பேருந்துகள் குறுகிய தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.[121] BEST 340க்கும் மேலான வழித்தடத்தில் 4.5 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மொத்தம் 4,037 பேருந்துகளை இயக்குகிறது. தனித்தட்டு, இரட்டைத்தட்டு, வெஸ்டிபுள், தாழ்தரை, ஊனமுற்றோருக்கான பேருந்து, குளிர்சாதன பேருந்து மற்றும் யூரோ iii விதிகளுக்கு பொருத்திய இயற்கை எரிவாயு பேருந்துகள் ஆகிய வகைகளை இந்த பேருந்து சேவை கொண்டுள்ளது.[122] நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு உதவும் MSRTC பேருந்துகள், மஹாராஷ்டிரா மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் மும்பையை இணைக்கின்றன.[123][124] மும்பையிலுள்ள பல சுற்றுலா தளங்களைச் சுற்றிக்காட்ட மும்பை தர்ஷன் எனும் சுற்றுலா பேருந்துகள் இருக்கின்றன.[125] மார்ச் 2009 முதல் ஏழு தடங்களில் பேருந்துகள் ஓடும் வகையில் மும்பை முழுவதும் BRTS தடங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.[126]
மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் முக்கிய விமான போக்குவரத்து மையமாகவும், இந்தியாவின் ஓய்வில்லாத விமான நிலையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.[127] ஜூஹூ விமான இறங்குதளம் இந்தியாவின் முதல் விமானநிலையமாகும். தற்போது இது பிளையிங் கிளப் மற்றும் ஹெலிபோர்ட் வசதியை அளிக்கிறது.[128] கோப்ரா-பவில் பகுதியில் உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கும் நவி மும்பை சர்வதேச விமானநிலையத்திற்கு அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதுடன், தற்போது இருக்கும் விமான நிலையத்தின் அதிகரித்து வரும் போக்குவரத்து சுமையைக் குறைக்கவும் உதவும்.[129]
அதன் பிரத்யேக இட அமைவுடன், உலகின் சிறந்த இயற்கை துறைமுகங்களில் ஒன்றாக மும்பை விளங்குகிறது.[130] இது நாட்டின் பயணிகள் போக்குவரத்தில் 60 சதவீதத்தையும், இந்திய சரக்கு கையாள்கையில் பெரும்பாகத்தையும் கையாள்கிறது.[3] இது இந்திய கப்பற்படைக்கு ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது, மேலும் மேற்கத்திய கப்பற்படையின் பிரிவின் தலைமையிடமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.[131] படகுகள் மூலமான படகு சவாரி இந்த பகுதிகளில் உள்ள தீவுகளையும், கடல்களையும் அணுக உதவுகிறது.[132]
பிரிஹன்மும்பை மின் வினியோகம் மற்றும் போக்குவரத்து (BEST) தீவு நகரம் எடுக்கும் 3,216 GWh[140] மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. மேலும் ரிலையன்ஸ் எனர்ஜி, டாட்டா பவர் மற்றும் மஹாவிட்ரானினால் (மஹாராஷ்டிரா மாநில மின்சார வினியோக நிறுவனம்) புறநகர்களுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. உற்பத்திதிறனை விட மின்சார நுகர்வு அதிவேகமாக வளர்ந்து வருகிறது.[141] 2000 வரை பிக்சட் லைன் மற்றும் செல்லுலர் சேவைகளை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் மட்டுமே கொண்டிருந்த அரசுத்துறையான எம்டிஎன்எல், மிகப்பெரிய தொலைபேசி சேவை அளிக்கும் நிறுவனமாக விளங்குகிறது. இது பிக்சட் லைன் மற்றும் மொபைல் டபிள்யூஎல்எல் சேவைகளையும் வழங்குகிறது.[142] செல்போன் கவரேஜ் மிக சிறப்பாக உள்ளது, இதில் வோடாபோன் எஸ்ஸார், ஏர்டெல், எம்டிஎன்எல், பிபிஎல் குழுமம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஐடியா செல்லுலார் மற்றும் டாடா இன்டிகாம் ஆகியவை முக்கிய சேவை அளிப்பு நிறுவனங்களாக உள்ளன. ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ ஆகிய இரண்டு சேவைகளும் நகரில் வழங்கப்படுகின்றன.[143] எம்டிஎன்எல் மற்றும் ஏர்டெல் இரண்டும் பிராட்பேண்ட் சேவையும் வழங்குகின்றன.[144][145]
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மும்பையின் மக்கள்தொகை 11,914,398[147], 2008ல் சர்வதேச இதழால் வெளியிடப்பட்ட கணக்கீடுகளின்படி, மும்பையின் மக்கள்தொகை 13,662,885[148] ஆகவும், மும்பை மாநகர பகுதி மட்டும் 20,870,764[149] ஆகவும் இருந்தது. மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 22,000 நபர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, BMC நிர்வாகத்தின் கீழ் உள்ள பரந்த மும்பையில் படித்தவர்களின் விகிதம் 77.45[150] சதவீதமாக இருக்கிறது, இது தேசிய சராசரியான 64.8[151] சதவீதத்தை விட அதிகமாகும். தீவு நகரில் பாலின விகிதம் 774ஆகவும் (ஆயிரம் ஆண்களுக்கு 774 பெண்கள்), புறநகரங்களில் 826 ஆகவும், ஒட்டுமொத்தமாக பரந்த மும்பையில் 811ஆகவும் இருந்தது[150]. இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் தேசிய சராசரியான 1,000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்பதை விட குறைவாகும்.[152]
இந்துக்கள் (67.39%), முஸ்லீம்கள் (18.56%), பௌத்தர்கள் (5.22%), ஜெயின் (3.99%) மற்றும் கிறித்தவர் (3.72%) உள்ளிட்டவர்கள் மும்பையில் மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இவர்களுடன் சீக்கியர்களும் மற்றும் பார்சியர்களும் மீதமிருக்கும் மக்கள்தொகையில் அடங்கியுள்ளனர்.[153] மொழி/இன அடிப்படையிலான மக்கள்தொகையியல்: மராத்தியர் (53%), குஜராத்தியர்கள் (22%), வட இந்தியர்கள் (17%), தமிழர்கள் (3%), சிந்திகள் (3%), துளுவர்கள்/கன்னடர் (2%) மற்றும் பிறர்.[154] இந்த பிரத்தியேக கலாச்சார கலவையானது, 1600களில் இருந்து இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் குடிபெயர்ந்ததால் ஏற்பட்டதாகும்.[155] போர்ச்சுகீசியர்களால் மதம் மாற்றப்பட்ட மராத்தி பேசும் கிழக்கு இந்திய கத்தோலிக்கர்கள் தான் தாய்நாட்டு கிறித்தவர்கள் ஆவார்கள்.[156]
இந்தியாவிலுள்ள பிற மாநகரங்களைப் போலவே மும்பையும் அதிகளவிலான பன்மொழியாளர்களைக் கொண்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் உத்தியோகப்பூர்வ மொழியான மராத்தி, பரவலாக பேசப்படுகிறது. இந்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவை பேசப்படும் பிற மொழிகளாகும்.[157] பம்பையா என்று வழங்கப்படும் பேச்சுவழக்கு இந்தியானது, மராத்தி, இந்தி, இந்திய ஆங்கிலம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பிற வார்த்தைகளின் கலவையாக தெருக்களில் பேசப்படுகிறது. ஆங்கிலம் பெருமளவில் பேசப்படுகிறது, மேலும் நகரத்தின் வெள்ளை காலர் பணிக்குழுக்கள் மத்தியில் இது முதன்மை மொழியாக இருக்கிறது.[158]
வளரும் நாடுகளில் உள்ள விரைவாக வளரும் பல நகரங்களில் காணப்படும் முக்கிய நகரமய பிரச்சனைகளில் மும்பையும் பாதிக்கப்படுகிறது: பெருமளவிலான மக்களிடையே நிலவும் பரவலான வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை, பொது சுகாதாரமின்மை மற்றும் நகர்புற நிர்வாகம் மற்றும் கல்வித்தரமின்மை ஆகியவை. உயர்மதிப்பில் கிடைத்திருக்கும் இடத்தில், மும்பை வாழ்மக்கள் பொதுவாக தடைபட்ட, அதிக செலவிலான, பொதுவாக பணியிடங்களில் இருந்து வெகு தூரத்தில் வசிக்கிறார்கள். இதனால் நெரிசல் மிகுந்த போக்குவரத்தில் அல்லது தடைகள் மிகுந்த சாலையில் நீண்டதூரம் பிரயாணிக்க வேண்டியுள்ளது.[159] 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மும்பை மக்களில் 54.1 சதவீதத்தினர் சேரிகளில் வாழ்கிறார்கள்.[160] ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய சேரியான[161] தாரவி, மத்திய மும்பையில் அமைந்துள்ளது. அதில் 800,000 மக்கள் வசிக்கிறார்கள்.[162] சேரிகளும் கூட சுற்றுலா கவர்ச்சிகளாக மும்பையில் வளர்ந்து வருகின்றன.[163][164][165] 1991-2001 வரையிலான தசாப்தத்தில் மஹாராஷ்டிராவிற்கு வெளியில் இருந்து மும்பைக்கு புலம்பெயர்ந்தோர்களின் எண்ணிக்கை 1.12 மில்லியனாக இருந்தது. இது மும்பையின் மொத்த மக்கள்தொகையை 54.8 சதவீதம் நிகர கூடுதல்களுக்கு வழிவகுத்தது.[166] 2007ல், மும்பையில் குற்ற விகிதம் (இந்திய பெனல் கோட்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள்) 1,00,000 மக்களுக்கு 186.2 ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 175.1 என்ற அளவை விட சற்றே அதிகமாகும், ஆனால் ஒரு நாட்டில் ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் 312.3 என்ற சராசரி குற்ற விகிதத்தை விட சற்றே குறைவாகும்.[167] இந்நகரத்தின் முக்கிய சிறைச்சாலை ஆர்தர் சாலையில் உள்ளது.[168]
மும்பை இந்திய சினிமாவின்[172] பிறப்பிடமாக விளங்குகிறது—தாதாசாகேப் பால்கே மௌன படங்களுக்கு அடிக்கல் நாட்டினார், இதை தொடர்ந்து மராத்தி பேசும் படங்கள் வந்தன—இங்கு பழைய திரைப்பட ஒளிபரப்பு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கியது.[173] பாலிவுட், மராத்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களை வெளியிடும் பெரும் எண்ணிக்கையிலான திரையரங்கங்களும் மும்பையில் உள்ளன. உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் டோம் தியேட்டர் வடாலாவிற்கு அருகில் உள்ளது.[174] மும்பை சர்வதேச திரைப்பட விழா[175], பிலிம்பேர் விருதுகளுக்கான விழா, இந்திப்பட தொழில்துறையில் பழைய மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகியவை மும்பையில் நடத்தப்படுகின்றன.[176] பிரித்தானியர் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட பெரும்பாலான சிறந்த திரையரங்க குழுக்கள் 1950களில் கலைக்கப்பட்டு விட்டதற்கு இடையிலும், மராத்தி, இந்தி, ஆங்கிலம் மற்றும் பிற பிராந்திய மொழிகளில் ஒரு வெற்றிகரமான திரையரங்க இயக்க பாரம்பரியத்தை மும்பை உருவாக்கி வருகிறது.[177][178]
அரசாங்க ஆதரவிலான கலை அரங்குகள் மற்றும் தனியார் வர்த்தக அரங்கங்கள் இரண்டிலும் சமகாலத்திய கலைகள் நன்கு வெளிப்படுகின்றன. ஜஹாங்கீர் கலையரங்கம் மற்றும் நவீன கலைகளுக்கான தேசிய கலையரங்கம் ஆகியவை அரசு ஆதரவிலான கலையரங்கங்களாகும்.[179] 1833ல் உருவாக்கப்பட்ட ஆசியாடிக் சொசைட்டி ஆப் பாம்பே என்பது நகரத்தில் இருக்கும் மிகப் பழமை வாய்ந்த பொது நூலகமாகும்.[180] சத்ரபதி சிவாஜி மஹாராஜ் வாஸ்து சங்க்ரஹாலியா (உத்தியோகப்பூர்வ தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம்) என்பது இந்திய வரலாற்றின் அரியான பண்டைய காட்சிப்பொருள்களைக் கொண்ட தெற்கு மும்பையில் உள்ள ஒரு புதிய கண்காட்சி சாலையாகும்.[181] ஒரு பூங்காவையும் கொண்ட ஜிஜாமதா உத்யான் (உத்தியோகப்பூர்வ விக்டோரியா கார்டன்ஸ்) என்று பெயரிடப்பட்ட மிருக காட்சிசாலையையும் மும்பைக் கொண்டிருக்கிறது.10}[419]
சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் எலிபண்டா குகைகள் ஆகிய இரண்டு பாரம்பரிய யுனெஸ்கோ இடங்களை மும்பை கொண்டுள்ளது.[182] நரிமன் பாயிண்ட், கிர்ஹாம் சௌபாத்தி, ஜூஹூ பீச் மற்றும் மரைன் டிரைவ் ஆகியவை நகரத்தின் பிற பிரபல சுற்றுலா தளங்களாகும்.[183][184] ஓர் தீம் பார்க் மற்றும் புத்துணர்வூட்டும் இடமாக விளங்கும் எஸ்செல் வோல்டு, கோரய் கடற்கரைக்கு அண்மையில் அமைந்துள்ளது.[185] ஆசியாவின் மிகப்பெரிய தீம் வாட்டர் பார்க்கான வாட்டர் கிங்டம் என்பது இந்நகரில் அமைந்துள்ளது.[186]
மும்பை வாழ் மக்கள் மேற்கத்திய மற்றும் இந்திய விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி, ஹோலி, ஈத், கிறிஸ்துமஸ், நவராத்திரி, புனித வெள்ளி, தசரா, மொஹரம், விநாயக சதுர்த்தி, துர்க்கா பூஜை மற்றும் மகா சிவராத்திரி ஆகியவை நகரத்தின் சில பிரபல விழாக்கள் ஆகும்.[187] இசை, நடனம், தியேட்டர் மற்றும் திரைப்பட துறைகளில் கலைஞர்களின் படைப்புகளை உள்ளடக்கிய காலா கோடா கலை விழா என்பது ஓர் உலக கலைகளின் கண்காட்சியாகும்.[188] ஒரு வாரம் காலம் கொண்டாடப்படும் பாந்த்ரா திருவிழா என்பது எல்லா மக்களாலும் கொண்டாடப்படுகிறது. மும்பையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பான்கங்கா டேங்க்கில் மஹாராஷ்டிரா சுற்றுலா அபிவிருத்தி கழகத்தால் ( MTDC) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பான்கங்கா விழா என்ற இரண்டு நாள் விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.[189] எலிபெண்டா தீவுகளி்ல் ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் கொண்டாடப்படும் எலிபெண்டா விழாவானது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தீவுக்கு வரும் கலைஞர்களுடன் பாரம்பரிய இந்திய நடனம் மற்றும் இசைக்காக அர்பணிக்கப்படுகிறது.[190]
மும்பை பின்வரும் நகரங்களுடன் துணை நகர உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது:[97]
[191]
கட்டண தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒன்றின் மூலமாகவோ அல்லது உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி சேவையளிப்போர் மூலமாகவோ பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச தொலைக்காட்சி சேனல்களை மும்பையில் காணலாம். பல்வேறு செய்தி சேனல்கள் மற்றும் அச்சு பிரசுரங்கள் பெருமளவில் இருப்பதால், இந்த மாநகரம் பல்வேறு சர்வதேச ஊடக பெருநிறுவனங்களின் மையமாக விளங்குகிறது. தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான தூர்தர்ஷன் இரண்டு இலவச சேனல்களை வழங்குகிறது[197], அதே வேளை மூன்று முக்கிய கேபிள் வலையமைப்புகள் பெரும்பாலான வீடுகளுக்கு சேவை வழங்குகின்றன.[198] ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ மராத்தி, ஈடிவி மராத்தி, டிடி சாஹ்யாத்ரி, மீ மராத்தி, ஜீ டாக்கிஸ், ஜீ டிவி, ஸ்டார் பிளஸ் ஆகியவற்றுடன் ஸ்டார் மஜ்ஹா போன்ற புதிய சேனல்களும் மிக பிரபலமாக உள்ளன. மும்பை மற்றும் மஹாராஷ்டிராவிற்காக மட்டும் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட செய்தி அலைவரிசைகளில் ஸ்டார் மஜ்ஹா, ஜீ 24 டாஸ் மற்றும் சஹாரா சாமே மும்பை போன்றவை உள்ளடங்கும். செயற்கோள் தொலைக்காட்சி (டிடிஎச்), அதன் உயர்ந்த நிறுவும் செலவுகளால் இன்னும் பெருந்திரளான வரவேற்பைப் பெறவில்லை.[199] டிஷ் டிவி மற்றும் டாடா ஸ்கை போன்றவை மும்பையின் முக்கிய டிடிஎச் பொழுதுபோக்கு சேவைகளாக உள்ளன.[200] பண்பலை வரிசையில் ஒன்பது ரேடியோ சேவைகளுடனும், ஏஎம் வரிசையில் மூன்று அனைத்திந்திய வானொலி ஒலிபரப்புகளும் சேர்த்து மொத்தம் பன்னிரெண்டு ரேடியோ ஒலிபரப்புகள் மும்பையில் இயங்கி வருகின்றன.[201] மேலும் வோல்டுஸ்பேஸ், சைரெஸ் மற்றும் எக்ஸ்எம் போன்ற வர்த்தக ஒலிபரப்பு சேவை அளிப்போர்களும் மும்பையில் உள்ளனர்.[202] மத்திய அரசாங்கத்தால் 2006ல் தொடங்கப்பட்ட கன்டிஷனல் அக்சஸ் சிஸ்டம், அதற்கிணையான ஒளிபரப்பு சேவையான டைரக்டு-டூ-ஹோம் தொழில்நுட்பத்தின் போட்டியால் சரியான வரவேற்பை பெறவில்லை.[203]
மும்பையை மையமாக கொண்டுள்ள இந்தி திரைப்படத்துறையான பாலிவுட், ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 150-200 திரைப்படங்களைத் தயாரிக்கிறது.[204] பாலிவுட் என்ற பெயர் பம்பாய் மற்றும் ஹாலிவுட் என்பதின் இணைப்புச் சொல்லாகும். 2000 ஆண்டுகளில், பாலிவுட் வெளிநாடுகளில் நல்ல வளர்ச்சியைக் கண்டது. இது தரம், ஒளிப்பதவி மற்றும் புதிய கதைகளிலும், அத்துடன் சிறப்பு தோற்றங்கள் மற்றும் அனிமேஷன் போன்ற தொழில்நுட்ப அபிவிருத்திகளிலும் திரைப்பட தயாரிப்பைப் புதிய உயரத்திற்கு இட்டு சென்றது.[205] திரைப்பட நகரம் உட்பட கோரேகாவ்வில் உள்ள ஸ்டூடியோக்கள், பெரும்பாலான திரைப்பட அரங்கங்களுக்கான இடமாக இருந்தன.[206] மராத்திய திரைப்பட தொழில்துறையும் மும்பையை மையமாக கொண்டே செயல்பட்டு வருகிறது.[207]
மும்பையில் தமிழ்நாட்டு மக்கள் அதிக அளவில் பல வருடங்களாக வசித்து வருவதால், அவர்கள் மும்பை நகர செய்திகளை தங்கள் தாய்மொழியில் தெரிந்துக்கொள்வதற்காக தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட பல்வேறு தமிழ் நாளிதழ்கள் மும்பையிலேயே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
10+2+3/4 திட்டத்தின் கீழ், மாணவ, மாணவியர் பத்தாண்டு கால பள்ளிப்படிப்பை முடிக்கின்றனர்[212]. பின்னர் அவர்கள் இரண்டு ஆண்டு ஜூனியர் கல்லூரியில் சேர்கின்றனர். அங்கு அவர்கள் கலை, வர்த்தகம் அல்லது விஞ்ஞானம் ஆகிய மூன்றில் ஒரு துறையைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துறையில் ஒரு பொதுவான பட்டப்படிப்பு தொடரப்படுகிறது அல்லது சட்டம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற உத்தியோக படிப்பு தொடரப்படுகிறது.[213]. பட்டப்படிப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையி்ல் உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ் பெரும்பாலான கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன[214]. இந்தியாவின் முக்கிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளிகளான இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை[215], வீர்மாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப பயிலகம் (VJTI)[216] மற்றும் யூனிவர்சி்ட்டி இன்ஸ்டியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி (UICT) மற்றும் SNDT பெண்கள் பல்கலைக்கழகம் ஆகியவை மும்பையில் உள்ள பிற தன்னாட்சி பல்கலைக்கழகங்களாகும்[217]. மேலாண்மை கல்விக்கான ஜம்னாலால் பஜாஜ் பயிலகம் (JBIMS), கே. ஜெ. சோமைய்யா இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் அண்டு ரிசர்ச் (SIMSR), எஸ். பி. ஜெயின் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் ஆகியவையும் மற்றும் பல பிற மேலாண்மை பள்ளிகளும் கூட மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன[218]. இந்தியாவின் மிக பழமையான சட்டம் மற்றும் வர்த்தக கல்லூரிகளான முறையே அரசு சட்டக்கல்லூரி மற்றும் சிடென்ஹாம் கல்லூரியும் மும்பையில் அமைந்துள்ளன[219][220]. சர் ஜெ. ஜெ. ஸ்கூல் ஆப் ஆர்ட் என்பது மும்பையின் மிகப் பழமையான கலை பயிலகமாகும்[221].
அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா பயிலகம் (TIFR), மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆகிய இரண்டு முக்கிய ஆராய்ச்சி பயிலகங்களும் மும்பையில் அமைந்துள்ளன[222]. டிராம்பேயில் உள்ள தன் ஆலையில் 40 மெகாவாட் அணு ஆராய்ச்சி உலையான சைரஸ் அணு உலையை (CIRUS) BARC இயக்குகிறது[223].
கால்பந்தாட்டமும் (சாக்கர்) இந்நகரத்தின் பிற பிரபல விளையாட்டுக்களில் ஒன்றாக விளங்குகிறது. FIFA உலக கோப்பையின் போது மும்பையில் பரவலாக பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும்.[230] ஐ-லீக்கில், மும்பை FC,[231] மகேந்திரா யுனைடெட்[232] மற்றும் ஏர்-இந்தியா ஆகிய மூன்று அணிகளால் மும்பை பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.[233] கிரிக்கெட்டின் எழுச்சியால், பீல்டு ஹாக்கி தன் பிரபலத்தன்மையை இழந்துவிட்டிருக்கிறது.[234] மும்பை மராத்திய வீரர்களின் மையமாகவும் விளங்குகிறது, மகாராஷ்டிராவில் உள்ள வெகு சில அணிகளில் ஒன்றான இது ப்ரீமியர் ஹாக்கி லீக்கில் (PHL) போட்டியிடுகிறது.[235] ஒவ்வொரு பிப்ரவரியிலும், மகாலக்ஷ்மி ரேஸ்கோர்சில் மும்பை டெர்பி போட்டிகளை நடத்துகிறது. மும்பையில் உள்ள டர்ஃப் கிளப்பில் பிப்ரவரியில் மெக்டொவல்ஸின் டெர்பி போட்டியும் நடத்தப்படுகிறது.[236] சமீபத்திய ஆண்டுகளில் பார்முலா 1 ரேசிங் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது,[237] 2008ல், போர்ஸ் இந்தியா F1 அணியின் கார் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது.[238] 2004 மார்ச்சில், மும்பை கிராண்ட் பிரிக்ஸ், F1 பவர்போட் உலக சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருந்தது.[239] 2004ல், இந்திய மக்களிடையே விளையாட்டு ஒழுக்கத்தைக் கொண்டு வர ஓர் உடன்படிக்கை மூலம் வருடாந்திர மும்பை மாரத்தான் - உருவாக்கப்பட்டது.[240] 2006 முதல், ஏடிபி வோல்டு டூரின் ஓர் சர்வதேச சுற்றுத் தொடரான தி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் டென்னிஸ் ஓபனிலும் மும்பை களமிறங்கியது.[241]
முன்னர் பம்பாயாக இருந்த மும்பை இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான இந்த நகரம், ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் மிக அதிக மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவதாக விளங்குகிறது.[1] நவி மும்பை மற்றும் தாணே ஆகிய அருகிலுள்ள புறநகரங்களுடன், ஏறத்தாழ 19 மில்லியன் மக்களுடன் மும்பை ஐக்கிய நாடுகள் அவையின் உலக நகரமயமாக்கல் திட்ட அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய நகர்ப்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சியாக உள்ளது .[2] இந்தியாவின் கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை, ஓர் ஆழமான இயற்கை துறைமுகம். இந்தியா கையாளும் கடல்வழி சரக்கு வணிகத்தில் மும்பை துறைமுகம் ஏறத்தாழ 60% பங்களிக்கிறது.[3]
கிமு மூன்றாம் நூற்றாண்டில், மௌரியப் பேரரசு மும்பையின் ஏழு தீவுகளை இந்து மற்றும் புத்த பண்பாட்டின் மையமாக மாற்றியது. பின்னர், போர்ச்சுகீசியர்களும் அவர்களைத் தொடர்ந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனமும் குடியேறுவதற்கு முன்னர் அந்த தீவுகள் வெற்றிபெற்ற உள்நாட்டு பேரரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவை ஒருங்கிணைக்கப்பட்டு, இந்நகரம் பம்பாய் என்று பெயரிடப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் நடுவில், இது ஒரு முக்கிய வணிக நகரமாக உருவானது. 19ஆம் நூற்றாண்டின் போது பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சி நிலைகள் இந்நகரை பெருமைப்படுத்தின. 20ஆம் நூற்றாண்டின் போது, இது இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வலிமையான தளமாகவும், ரௌல்த் சத்தியாகிரகத்தின் மற்றும் அரசரின் இந்திய கப்பற்படை கலகத்தின் வரலாற்று மையமாகவும் இது விளங்கியது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற போது, இந்நகரம் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1960ல், சம்யுக்தா மகாராட்டிரா போராட்டத்தைத் தொடர்ந்து, பம்பாயை தலைநகரமாக கொண்டு மகாராட்டிரம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. 1996ல், பம்பாய் மும்பை என்று பெயர் மாற்றப்பட்டது.[4]
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்[5] 5% பங்களித்தும், தொழில்துறை உற்பத்தியில் 25% பங்களித்தும், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு கடல்வழி வாணிபத்தில் 40 விழுக்காடும், மூலதன பரிமாற்றத்தில் 70 விழுக்காடும் அளித்து இந்தியாவின் வணிக மையமாக மும்பை விளங்குகிறது.[6] இந்திய ரிசர்வ் வங்கி, மும்பை பங்குச்சந்தை, இந்திய தேசிய பங்குச்சந்தை போன்ற முதன்மை நிதி அமைப்புகளுக்கு மையமாக விளங்கும் மும்பை, பல்வேறு இந்திய நிறுவனங்களின் மற்றும் கணக்கிடுதற்கரிய பன்னாட்டு நிறுவனங்களின் பெருநிறுவன தலைமையிடமாகவும் இது விளங்குகிறது. இந்நகரம் பாலிவுட் என்றழைக்கப்படும் இந்தி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொழில்துறையையும் உட்கொண்டிருக்கிறது. மும்பையின் வியாபார வாய்ப்புகளும், ஒரு சிறந்த வாழ்க்கை தரத்தை அளிக்கக்கூடிய எதிர்பார்ப்புகளும் இந்தியாவின் பிற மாநில மக்களையும் ஈர்க்க கூடியதாக உள்ளது, இதன் விளைவாக, இது இந்நகரை பல்வேறு சமூகங்கள் மற்றும் பண்பாட்டுக் கலவையாக மாற்றியுள்ளது.
பொருளடக்கம்
பெயர் வரலாறு
மும்பை என்ற பெயர் ஓர் ஆகுபெயராகும், மும்பா அல்லது மகா-அம்பா (புனிதப் பெண் தெய்வமான மும்பாதேவியின் பெயர்) மற்றும் மராத்தியில் "அம்மா" என்பதற்கான ஆய் என்பதில் இருந்து பெயராய்வியல் வகையில் தருவிக்கப்பட்டது.[7] 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் வந்திறங்கிய பகுதியை, மொம்பாய் , மொம்பே , மொம்பேன் , மொம்பேம் மற்றும் பொம்பாய் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, இறுதியில் பொம்பாய்ம் (இது தற்போதைய போர்ச்சுகீசியத்தில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது) என்ற எழுத்து வடிவத்தைப் பெற்ற போது தான், முந்தைய பெயரான பம்பாய் என்பது தோன்றியது.[8] 17ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் உடைமையாக்கிய பின்னர், போர்ச்சுகீசிய பொம்பாய்ம் என்பதில் இருந்து பம்பாய் என்று ஆங்கில வடிவத்திற்கு மாற்றப்பட்டதாக நம்பப்பட்டது.[9] மராத்தி மற்றும் குஜராத்தி பேசுபவர்களால் இந்நகரம் மும்பை அல்லது மம்பை என்றும், ஹிந்தி, பெர்சியன் மற்றும் உருதுவில் பம்பாய் என்றும் அறியப்பட்டது. இன்றும் கூட சில வேளைகளில் இது அதன் பழைய பெயர்களான காக்காமுச்சி மற்றும் கலாஜூன்க்ஜா போன்ற பெயர்களால் குறிக்கப்படுகிறது.[10][11] 1996ல் பெயர் அலுவல்ப்பூர்வமாக அதன் மராத்தி உச்சரிப்பிற்கு ஏற்ப மும்பை என்று மாற்றப்பட்டது.[12] காலனிய அமைப்புகளின் பெயர்களை அவற்றின் வரலாற்று ரீதியான உள்ளூர் பெயர்களுக்கு மாற்றுவது என்ற கொள்கையின் அடிப்படையில் இது மாற்றப்படுகிறது.[13]பாரம்பரிய ஆங்கில பெயரான Bombay என்பது, "நல்ல வளைகுடா" என்ற ஒரு போர்ச்சுகீசிய சொல்லில் இருந்து பெறப்பட்டது என்று ஒரு பரவலான விளக்கத்தைக் கொண்டிருக்கிறது. bom (masc.) என்பது போர்ச்சுகீசியத்தில் "நல்ல" என்றும், ஆங்கிலத்தில் "bay" என்ற வார்த்தை, போர்ச்சுகீசியத்தில் baía (பழைய உச்சரிப்புகளில் fem., bahia )என்ற வார்த்தைக்கு இணையானது என்ற உண்மையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. "நல்ல வளைகுடா" என்பதற்கான பொதுவான போர்ச்சுகீசிய சொல் boa bahia என்பதாகும், இன்னும் தெளிவாக கூறுவதானால் bom bahia என்பது இலக்கண முறைப்படி தவறு.எவ்வாறிருப்பினும், 16ஆம் நூற்றாண்டு போர்ச்சுகீசியத்தில் "சிறிய வளைகுடா" என்பதற்கு baim (masc) என்ற வடிவத்தைக் கண்டறிய முடிகிறது.[9]
போர்ச்சுகீசிய பெயராய்வான Bombaim மிற்கு பல்வேறு வகையான மூலங்களை பிற ஆதாரங்கள் கொண்டிருக்கின்றன. José Pedro Machado's Dicionário Onomástico Etimológico da Língua Portuguesa ("போர்ச்சுகீஸ் டிக்சனரி ஆப் ஓனோமாஸ்டிக்ஸ் அண்டு எடிமோலொஜி") 1516 முதல், அவ்விடத்திற்கான முதல் போர்ச்சுகீசிய குறிப்பீடு என்னவாக இருந்திருக்கும் என்பதை, Benamajambu அல்லுத Tena-Maiambu [14] என்று குறிப்பிடுகிறது, Maiambu என்பது இந்து பெண் தெய்வமான மும்பா-தேவியைக் குறிப்பதாக தெரிகிறது என்று இது குறிப்பிடுகிறது. இதற்காகவே இவ்விடம் மராத்தியில் (மும்பை) பெயரிடப்பட்டுள்ளது. அதே நூற்றாண்டில், எழுத்துக்கள் Mombayn (1525)[15] என்றும், Mombaim (1563) என்றும் உருவாகி இருப்பதாக தெரிகிறது.[16] காஸ்பர் கோரியாவால் அவரின் Lendas da Índiaல் (லெஜெண்ட்ஸ் ஆப் இந்தியா)[17], இறுதி வடிவமான Bombaim 16 நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாகிறது என்று குறிப்பிடுகிறார். போர்ச்சுகீசிய பெயராய்வின் ஒரு பகுதியாக பெயர்ச்சொல் (bahia , "bay") இருந்ததைக் குறிப்பிட்டும், ஆங்கிலேயர்களால் தலைமையேற்கப்பட்ட அந்த இடத்தில் ஒரு வளைகுடா இருந்ததைப் போர்ச்சுகீசிய ஆதாரங்கள் குறிப்பிட்டு காட்டுவதை எடுத்துக்காட்டியும், இதனால் ஆங்கிலத்தில் கூறப்படும் Bombay என்பது போர்ச்சுகீசியத்தில் இருந்து பெறப்பட்டது என்று உறுதியாக வலியுறுத்துவதன் மூலம் இந்த "Bom Bahia" பகுப்பாய்வை ஜெ.பி. மசாடோ நிராகரிப்பதாக தெரிகிறது.[18]
வரலாறு
முதன்மை கட்டுரை: மும்பை காலநிலை
இதனையும் பார்க்க: மும்பையின் காலக்கோடு
ஒரு காலத்தில் பம்பாய் தீவு, பரேல், மச்சாகாவ், மாஃகிம், கொலாபா, வோர்லி மற்றும் கிழவித் தீவு (ஓல்டு வுமன் தீவு) (லிட்டில் கொலாபா என்றும் அறியப்படும் )[9] ஆகிய ஏழு தீவுகள் கூட்டமாக இருந்த இடத்தில் மும்பை அமைந்துள்ளது. பிரிட்டிஷ் நில ஆய்வாளர் டோட்டினால் 1939ல், வடக்கு மும்பையின் கண்டிவாலிக்கு அருகில் பிளைஸ்டோசின் வண்டல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தீவுகளில் கற்காலத்தில் இருந்து மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவர் தெரிவிக்கிறார்.[19] முதல் குடியானவர்கள் ஒரு மீனவ சமூகமான கோலிகள் என்று அழைக்கப்படுபவர்கள் இருந்தார்கள். கிறிஸ்துவிற்கு முன்னர் காலத்திய மூன்றாம் நூற்றாண்டில், மௌரியப் பேரரசின் பகுதியாக இருந்த இந்த தீவுகள், மகதத்தின் பௌத்தப் பேரரசரான அசோகரால் ஆளப்பட்டது.[20] இத் தீவுக்கூட்டங்கள் கி.பி.150ல் கிரேக்க புவியாய்விலர் தொலமியால் ஹெப்டானீசியா (பண்டைய கிரேக்கத்தில் ஏழு தீவுகளின் கூட்டம் ) என்று அறியப்பட்டன.[9] பின்னர், 810 முதல் 1260 வரை சில்ஹாரா பரம்பரையால் ஆளப்படுவதற்கு முன்னர், கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் கிறிஸ்துவ சகாப்தத்தின் ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் இடையில் இந்த தீவுகள் சுதந்திர அரசாட்சிகளான சாதவாகனர்கள், அப்ஃகியர்கள், வாகாடகர்கள், காலச்சூரியர்கள், கொன்கன் மௌரியர்கள், சாளுக்கியர்கள் மற்றும் ராட்டிரகூடர்கள் போன்றவர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.[21] 13 நூற்றாண்டின் பிற்பகுதியில் மஹிகாவதியை (தற்போது மாஃகிம் என்றழைக்கப்படுவது) தலைமையிடமாக கொண்டு அப்பகுதியில் ராசா பீம்தேவ் தமது ஆட்சியை நிறுவினார்.[22][23] அவர் சௌராட்டிரா மற்றும் டெக்கானில் இருந்து பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை மாஃகிக்காவதியில்(மாகிம்) குடியமர்த்த அழைத்து வந்தார்.[24] குஜராத்தின் முஸ்லீம் ஆட்சியாளர்கள் 1348ல் இத்தீவுகளை அவர்களுடன் சேர்த்து கொண்டார்கள்.[21] பின்னர் அவர்கள் 1391 முதல் 1534 வரை குசராத் சுல்தான்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டார்கள்.[25][26][27] 1429 முதல் 1431 வரை, இந்த தீவுகள் குஜராத் சுல்தான்களுக்கும், டெக்கானின் பாமினி சுல்தான்களுக்கும் இடையிலான சண்டைகளுக்கு ஆதாரமாக இருந்தது.[25] 1491 முதல் 1494 வரை, இந்த தீவுகள், பாமினி சுல்தானிய ராச்சியத்தின் ஒரு சிறப்புமனிதரான பகாதூர் கான் கிலானியால் பல கடற்கொள்ளைகளால் பாதிக்கப்பட்டது.[28]முகலாயப் பேரரசின் உமாயூன், குசராத் சுல்தானிய பேரரசின் சுல்தான் பகதூர் சா ஆகியோரிடம் வளர்ந்து வந்த அதிகார உணர்வானது, 1534 டிசம்பர் 23ல் போர்ச்சுகீசிய குடியேற்றக்காரர்களுடன் பேசின் உடன்படிக்கை செய்து கொள்ள கட்டாயப்படுத்தியது. அந்த உடன்படிக்கையின்படி, பம்பாயின் ஏழு தீவுகளும், அருகில் இருந்த மூலோபாய நகரான பேசினும், அதை சார்ந்திருந்தவையும் போர்ச்சுகீசியர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த பிரதேசங்கள் பின்னர் 1535 அக்டோபர் 25ல் திருப்பி அளிக்கப்பட்டன. போர்ச்சுகீசியர்கள் பம்பாயில் தங்களின் ரோமன் கத்தோலிக்க மத ஒழுக்கங்களுக்கு அடித்தளமிடுவதிலும், வளர்ப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். மாகிமில் உள்ள புனித மிக்கேல் தேவாலயம், ஆந்திரியில் உள்ள புனித யோவான் பாப்டிசுட்டு தேவாலயம், பாந்த்ராவில் உள்ள புனித ஆண்ட்ரூ தேவாலயம் போன்ற பழமை வாய்ந்த சில தேவாலயங்கள் போர்ச்சுகீசிய காலத்தில் உருவக்கப்பட்டவையாகும்.[29] 1661 மே மாதத்தில், இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸூக்கும், போர்ச்சுகல்லின் அரசர் நான்காம் சானின் மகள் பிரகன்சாவின் கத்தரீனுக்கும் ஏற்பட்ட திருமண ஒப்பந்தத்தில் சார்லஸிற்கான கேத்ரினின் வரதட்சணையாக இந்த தீவுகள் பிரித்தானியப் பேரரசிற்கு வழங்கப்பட்டது.[30][31] இந்த தீவுகள், 1668 மார்ச் 27ன் ராயல் மசோதாவால் ஆண்டுக்கு £10 என்ற அடிப்படையில் 1668ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் ஏலத்தில் எடுத்து கொண்டது.[32] 1661ல் 10,000ஆக இருந்த மக்கள்தொகை 1675ல் 60,000ஆக விரைவாக அதிகரித்தது.[33] 1687ல், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையிடத்தை சூரத்தில் இருந்து பம்பாய்க்கு மாற்றியது.இறுதியாக இந்நகரம் பம்பாய் பிரசிடெண்சியின் தலைமையிடமாக மாறியது.[34] மாற்றத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து நிறுவனங்களின் தலைமையிடமாக பம்பாய் உருவாக்கப்பட்டது.[35] 17 நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முகலாயர்களின் தாக்குதல்களால் இந்த தீவுகள் மிகவும் பாதிக்கப்பட்டன.[36]
1782 முதல், அனைத்து ஏழு தீவுகளையும் ஒரே ஒருங்கிணைப்பில் கொண்டு வரும் நோக்கில், இந்நகரம் பெரியளவிலான கட்டுமான பொறியியல் திட்டங்களுடன் மறுவடிவம் பெற்றது. ஹார்ன்பி வெல்லார்டு என்று அறியப்பட்ட இந்த திட்டம், 1784ல் முடிக்கப்பட்டது.[37] 1853 ஏப்ரல் 16ல், பம்பாய்க்கும் அதன் அருகில் இருக்கும் தானேவுக்கும் இடையில் இந்தியாவின் முதல் பயண ரயில்பாதை ஏற்படுத்தப்பட்டது.[38] அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் (1861–1865) போது, இந்நகரம் உலகின் முக்கிய பருத்தி வியாபார சந்தையாக விளங்கியது, இதனால் ஏற்பட்ட பொருளாதார அபிவிருத்தி, நகரத்தின் வளர்ச்சியையும் கணிசமாக உயர்த்தியது.[39] 1869ல் திறக்கப்பட்ட சுயஸ் கால்வாய், அரேபிய கடலில் உள்ள மிகப்பெரிய கடற்துறைமுகங்களில் ஒன்றாக பம்பாயை மாற்றியது.[40]
1896 செப்டம்பரில், பம்பாய் ஒரு கொடூரமான பிளேக் தொற்றுநோயால் தாக்கப்பட்டு, அதில் வாரத்திற்கு 1,900 மக்கள் இறந்ததாக கணக்கிடப்பட்டது.[41] சுமார் 850,000 மக்கள் பம்பாயை விட்டு வெளியேறினார்கள். ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.[42] பம்பாய் பிரசிடெண்சியின் தலைநகரம் என்ற வகையில் 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் மற்றும் 1946ல் ராயல் இந்திய கப்பற்படை கலகம் ஆகியவற்றுடன் இந்திய சுதந்திர போராட்டத்திற்கும் பம்பாய் பிரதான சாட்சியாக இருந்தது.[43][44] 1947ல் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர், பம்பாய் ராஜதானி ஆட்சியின் பிரதேசம் இந்தியாவால் கைப்பற்றப்பட்டு பம்பாய் மாநிலம் என்று மறுகட்டுமானம் செய்யப்பட்டது. இந்திய பிரதேசத்தில் முந்தைய அரசாட்சி மாநிலங்கள் பல சேர்ந்த பின்னர் அவை பம்பாய் மாநிலத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன, இதனால் பம்பாய் மாநிலத்தின் பரப்பளவும் அதிகரித்தது. அதை தொடர்ந்து, இந்நகரம் பம்பாய் மாநிலத்தின் தலைநகராக மாறியது.[45] 1950 ஏப்ரலில், பம்பாய் புறநகர்கள் மற்றும் பம்பாய் நகரம் ஆகியவற்றின் இணைப்புடன் பரந்த பம்பாய் மாவட்டம் உயிர் பெற்றது.[46]
1992-93ல் ஏற்பட்ட ஹிந்து-முஸ்லீம் கலகங்கள், நகரத்தின் பாதுகாப்பான ஜவுளித்துறையை கிழித்து போட்டது. அதில் 1,000த்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.[53] 1993 மார்ச் 12ல், இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் பம்பாய் நிழலுகத்தால் நகரத்தின் முக்கிய பல பகுதிகளில் வெடிக்க செய்யப்பட்ட 13 தொடர் குண்டுவெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டனர், 700 பேர் காயமடைந்தனர்.[54] 2006ல், நகர பயண ரயில்களில் ஏழு குண்டுகள் வெடித்ததில், 209 பேர் கொல்லப்பட்டனர், 700க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.[55] 2008 நவம்பர் 26ல் இருந்து 2008 நவம்பர் 29 வரை ஆயுதந்தாங்கிய துப்பாக்கியாளர்களால் 10 ஒருங்கிணைந்த தொடர் பயங்கரவாத தாக்குதல்களில் 164 பேர் கொல்லப்பட்டனர், 308 பேர் காயமடைந்தனர், மேலும் பல முக்கிய கட்டிடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.[56]
புவியியல்
முதன்மை கட்டுரை: மும்பை புவியியல்
மும்பை, கொங்கண் என்றழைக்கப்படும் கடற்கரை பகுதியான இந்தியாவின் மேற்கத்திய கடற்கரையில் உள்ள உல்லாசு ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. அது சால்செட்டெ தீவிலும், பகுதியாக தாணே மாவட்டத்திலும் அமைந்துள்ளது.[9] நகரத்தின் பல பகுதிகள், 10 m (33 ft)இல் இருந்து 15 m (49 ft) வரையிலான உயரத்துடன், கடல்மட்டத்தை விட சற்றே மேல்மட்டத்தில் அமைந்துள்ளது.[57] இந்நகரம் ஏறத்தாழ 14 m (46 ft),[58] உயரத்தைக் கொண்டிருக்கிறது. வடக்கு மும்பை மலைப்பகுதிகளால் ஆனது, நகரத்தின் உயரமான பகுதியான 450 m (1,476 ft) சால்செட்டெ தீவில் உள்ளது.[59] மும்பை பெருநகரம் 603 km2 (233 sq mi) என்கிற மொத்த பரப்பளவில் விரிந்துள்ளது.[60] சஞ்சய் காந்தி தேசிய பூங்கா (போர்வில்லி தேசிய பூங்கா) மும்பையின் புறநகர் மாவட்டத்தில் ஒரு பகுதியாகவும், தானே மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது, அது 103.09 km2 (39.80 sq mi)[137] வரையிலான பகுதியில் விரிந்துள்ளது.[61]பாட்சா அணைக்கு அப்பாற்பட்டு, விகார், கீழ் வைட்டர்னா, மேல் வைட்டர்னா, துளசி, தான்சா மற்றும் பவாய் போன்ற அங்கு ஆறு முக்கிய ஏரிகள் உள்ளன. இவற்றில் இருந்தே நகரத்திற்கு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.[62][63] துளசி ஏரி மற்றும் விகார் ஏரி இரண்டும் மாநகர எல்லைக்குள் போரிவில்லி தேசிய பூங்காவில் அமைந்துள்ளன.[64] நகர எல்லைக்குள் அமைந்துள்ள பவாய் ஏரியின் வினியோகம் விவசாயம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது.[65] தகிசார் ஆறு, போயின்சார் (அல்லது போய்சார்) மற்றும் ஒசிவாரா (அல்லது ஒகிவாரா) ஆகிய மூன்று சிறிய ஆறுகளும் பூங்காவிற்கு உள்ளிருந்தே உருவாகின்றன. மாசு நிறைந்த மீதி ஆறு துளசி ஆறில் இருந்து உருவாகி, விகார் மற்றும் பவாய் ஏரிகளில் நிரம்பிய மீத நீருடன் கலக்கிறது.[66] நகரத்தின் கடற்கரை பகுதி பல சமவெளிகள் மற்றும் மேடுபள்ளங்களுடன் ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளது. அது கிழக்கில் தாணே கிரீக்கில் இருந்து மேற்கு முகப்பில் மத் மார்வே வரை நீண்டுள்ளது. [67] சால்செட்டின் கிழக்கு கடற்கரை பெருமளவிலான சதுப்புநிலக் காடுகள் மற்றும் உயிரிமாற்றீட்டு வளங்களையும் கொண்டுள்ளது. மேற்கத்திய கடற்கரையில் பெருமளவில் வண்டலும், பாறைகளும் நிரம்பியுள்ளன.[68]
கடல் அருகில் இருக்கும் காரணத்தால், நகர பகுதியில் இருக்கும் மண் வளமான வண்டல்மண்ணாக உள்ளது. புறநகர் பகுதிகளில், மண் மேற்புரம் பெருமளவில் வண்டல்கள் மற்றும் கரிசல்களால் நிரம்பியுள்ளது. அப்பிராந்தியத்தின் அடிமட்ட பாறைகள், கருப்பு டெக்கான் திடக்குழம்பு கலவையால் ஆனவை. அவற்றின் அமில மற்றும் அடிப்படை மாறிகள் கிறிட்டேசியஸூக்கு பிந்தைய மற்றும் யூசினின் ஆரம்ப காலத்தியவை ஆகும்.[66] மும்பை ஒரு நிலஅதிர்வுக்குரிய மண்டலத்தில் அமைந்துள்ளது.[69] அதன் சுற்றுவட்டத்தில் மூன்று அபாயக் கோடுகளைக் கொண்டுள்ளது. இந்த பகுதி ஒரு நிலஅதிர்வுக்குரிய மூன்றாம் மண்டல பகுதி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது 6.5 ரிக்டர் அளவு வரையிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பது இதன் பொருளாகும்.7}[70]
தட்ப வெப்பநிலை
முதன்மை கட்டுரை: Climate of Mumbai
பூமத்தியரேகை பகுதியிலும் மற்றும் அரேபிய கடலுக்கு அருகில் இருப்பதால், ஈரப்பதமான பருவநிலை மற்றும் உலர்ந்த பருவநிலை ஆகிய இரண்டு முக்கிய பருவநிலைகளை மும்பை பெறுகிறது.மார்ச் மற்றும் அக்டோபருக்கு இடைப்பட்ட ஈரப்பதமான பருவநிலையில் அதிகளவிலான ஈரப்பதமும், 30 °C (86 °F) மேற்பட்ட வெப்பநிலையும் நிலவும். ஜூன் மற்றும் செப்டம்பருக்கு இடையில், நகரையே பாழாக்கும் மழைகாலமாக இருக்கும். அம்மாதங்களுக்கு இடையில் தான் நகரத்தின் ஆண்டு மழையளவான 1,800 millimetres (70.9 in) கிடைக்கிறது, சராசரி அளவான 600 millimetres (23.6 in) ஜூலையில் ஒரே மாதத்தில் பூர்த்தி செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஆண்டு மழையளவாக 1954ல் 3,452 millimetres (135.9 in)என்ற அளவு பதிவு செய்யப்பட்டது.[66] ஒருநாள் அதிகபட்ச மழையளவு 944 millimetres (37.17 in) 2005 ஜூலை 26ல் பதிவு செய்யப்பட்டது.[71] நவம்பர் மற்றும் பிப்ரவரிக்கு இடைப்பட்ட உலர்வு காலமானது, மிதமான ஈரப்பதம் மற்றும் மிதமான குளிர்ச்சி பொருந்திய காலநிலையாக விளங்குகிறது. வடக்கிலிருந்து வரும் குளிர்ந்த காற்றால் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் இதமான குளிர் தென்றல் கிடைக்கிறது.[72] தினசரி குறைந்தபட்சம் 16.4 °C (61.5 °F) உடன், ஓர் ஆண்டில் ஜனவரி மாதமே மிக குளிர்ச்சி மிக்க மாதமாக இருக்கிறது.[73]
ஆண்டு வெப்பநிலைகள் உயர்ந்தளவாக 38 °C (100 °F) லிருந்து குறைந்தபட்சமாக 12 °C (54 °F) வரை மாறுபடுகிறது.[72] இதுவரையிலான அதிகபட்ச அளவு 43.3 °C (109.9 °F) மற்றும் குறைந்தபட்ச அளவு 7.4 °C (45.3 °F) ஆகும்.[74]
பொருளாதாரம்
முதன்மை கட்டுரை: மும்பையின் வரலாறு
இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பை, நாட்டின் நிதித்துறை தலைமையிடமாக கருதப்படுகிறது.[75] இந்தியாவின் முக்கிய பொருளாதார மையமாக திகழும் இது, மொத்த நிறுவன வேலைவாய்ப்பில் 10 சதவீதமும், மொத்த வருமான வரி வசூலில் 40 சதவீதமும், மொத்த சுங்கவரி வசூலில் 60 சதவீதமும், மொத்த மத்திய கலால் வரி வசூலில் 20 சதவீதமும், இந்திய வெளிநாட்டு வர்த்தகம் 40 சதவீதமும் மற்றும் பெருநிறுவன வரிகளில் 

நகரத்தின் தொழிலாளர்களில் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் சதவீதத்தில் உள்ளனர். மும்பை பெருமளவிலான தொழிற்திறனற்ற மற்றும் சிறிதே தொழில்திறன் பெற்ற தொழிலாளர்களையும் பெருமளவில் கொண்டுள்ளது. இவர்கள் தெருவியாபாரிகளாகவும், டாக்சி ஓட்டுனர்களாகவும், மெக்கானிக்குகளாகவும் மற்றும் நீல காலர் பணிகளில் இருப்பவர்களாகவும் தங்கள் வாழ்க்கைக்காக சம்பாதிக்கிறார்கள்.[81] துறைமுகம் மற்றும் கப்பல் தொழில்துறையானது, இந்தியாவில் உள்ள மிக பழமை வாய்ந்த மற்றும் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான மும்பை துறைமுகத்துடன் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.[82] மத்திய மும்பையில் உள்ள தாரவியில், ஒரு பெரிய மறுசுழற்சி தொழிற்துறை உள்ளது, இது நகரத்தின் பிற பகுதிகளில் இருந்தும் கழிவுகளை மறுசுழற்சி செய்து வருகிறது. இந்த மாவட்டம் 15,000 ஒரே-அறை தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.[83]
இந்தியாவின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் செயற்கோள் வலையமைப்புகளின் பெரும்பான்மையும், அத்துடன் அவற்றின் முக்கிய பிரசுரங்களும் மும்பையைத் தலைமையிடமாக கொண்டுள்ளன. இந்தி திரைப்பட தொழிற்துறையின் மையமான பாலிவுட், இந்தியாவில் அதிகளவிலான படங்கள் தயாரிப்பு துறையாகவும், உலகின் மிகப்பெரியவற்றில் ஒன்றாகவும் விளங்குகிறது.[84][85][86] இந்தியாவின் மீதப்பகுதிகளுடன், வர்த்தக தலைமையிடமான மும்மை, 1991ன் தாராளமயமாக்கலில் இருந்தும், 90களின் மத்தியில் ஏற்பட்ட நிதி வளர்ச்சியில் இருந்தும், 2000த்தில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பம், ஏற்றுமதி, சேவைகள் மற்றும் அவுட்சோர்சிங் வளர்ச்சியில் இருந்தும் ஒரு பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது.[87] உலகளாவிய மையங்களுக்கான 2008 வர்த்தக குறியீட்டில் மும்பை 48வது இடத்தைப் பிடித்துள்ளது.[88] 2008 ஏப்ரலில், போர்ப்ஸ் இதழால்[89] வெளியிடப்பட்ட "பில்லினியர்களின் முதல் பத்து நகரங்கள்" பட்டியலில் மும்பை ஏழாவது இடத்தைப் பிடித்தது, ஆனால் பில்லினியர்களின் சராசரி வளங்களில், இந்த பத்து நகரங்களில் மும்பை உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது.[90]
நகர நிர்வாகம்
முதன்மை கட்டுரை: Brihanmumbai Municipal Corporation
மும்பை இரண்டு முக்கிய பிராந்தியங்களைக் கொண்டுள்ளது: நகரம் மற்றும் புறநகரம். இவை மஹாராஷ்டிராவின் இரண்டு தனித்தனி மாவட்டங்களை உருவாக்குகின்றன.[91] நகர பகுதி பொதுவாக தீவு நகரம் என்றும் குறிக்கப்படுகிறது.[92] தீவு நகரம் மற்றும் புறநகரங்கள் இரண்டும் ஒட்டுமொத்தமாக இணைந்த நிலையில் மும்பை, பிரஹன் மும்பை முனிசிப்பல் கார்ப்பரேஷனினால் (உத்தியோகப்பூர்வமாக பம்பாய் முனிசிப்பல் கார்ப்பரேஷன்)[93], மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஓர் ஐஏஎஸ் அதிகாரியான முனிசிப்பல் கமிஷனரின் அதிகாரத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.[94] இருபத்தி நான்கு முனிசிப்பல் வார்டுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 227 நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 227 கவுன்சிலர்களையும், ஐந்து நியமிக்கப்பட்ட கவுன்சிலர்களையும் மற்றும் ஒரு மேயரையும் (இவரின் பாத்திரம் பெரும்பாலும் விழா சார்ந்து இருக்கும்) கார்ப்பரேஷன் கொண்டிருக்கிறது.[95][96] மேயர் சுபா ராவுல், முனிசிப்பல் கமிஷனர் ஜெய்ராஜ் பதக் மற்றும் ஷெரீப், இந்து ஷாஹனி ஆகியோரால் மும்பை தலைமையெடுக்கப்பட்டுள்ளது. மாநகரத்தின் நகர மற்றும் உள்கட்டமைப்பு தேவைகளுக்கு BMC பொறுப்பேற்கிறது.[97] ஓர் உதவி முனிசிப்பல் கமிஷனர் ஒவ்வொரு வார்டின் நிர்வாகத்தையும் கண்காணிப்பார்.[94] பெரும்பாலும் அனைத்து மாநில அரசியல் கட்சிகளும் கவுன்சிலர் தேர்தல்களில் தங்களின் வேட்பாளர்களை நிறுத்துவார்கள். மும்பை மாநகர பகுதி 7 முனிசிப்பல் கார்ப்பரேஷன்கள் மற்றும் 13 முனிசிப்பல் கவுன்சில்களைக் கொண்டுள்ளது. BMCக்கு கூடுதலாக, இது தானே, கல்யாண்-டோம்பிவலி, நவி மும்பை, மிரா-பயந்தர், பெவண்டி-நிஜாம்பூர் மற்றும் உல்ஹாஸ்நகர் முனிசிப்பல் கார்ப்பரேஷன்களையும் உள்ளடக்கி உள்ளது.[98] பரந்த மும்பை மஹாராஷ்டிராவில் இரண்டு மாவட்டங்களை உருவாக்குகிறது. ஒவ்வொன்றும் மாவட்ட ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.[99] சொத்து ஆவணங்கள் மற்றும் மத்திய அரசிற்கான வருவாய் ஆவணங்கள் ஆகியவற்றிற்கு பொருப்பான மாவட்ட ஆணையர்கள் நகரத்தில் நடத்தப்படும் தேசிய தேர்தல்களையும் கண்காணிப்பார்கள்.[100][101]ஓர் ஐபிஎஸ் அதிகாரியான போலீஸ் கமிஷனர் ஒருவர் மும்பை போலீஸ் துறைக்கு தலைமை வகிப்பார். மும்பை போலீஸ் மாநிலத்தின் உள்துறை இலாக்காவின் கீழ் வருகிறார்.[102] துணை போலீஸ் கமிஷனர்களின் தலைமையில் நகரம் ஏழு போலீஸ் மண்டலங்களாகவும், பதினேழு போக்குவரத்து போலீஸ் மண்டலங்களாகவும்[103] பிரிக்கப்பட்டுள்ளது.[104] போக்குவரத்து போலீஸ் என்பது மும்பை போலீஸ் துறையின் கீழ் பாதி-தன்னாட்சி பெற்ற சுய அமைப்பாக செயல்படுகிறது. மும்பை தீயணைப்பு துறை முதன்மை தீயணைப்பு அதிகாரியின் தலைமையின் கீழ் செயல்படுகிறது. இவரின் கீழ் நான்கு துணை முதன்மை தீயணைப்பு அதிகாரிகளும், ஆறு பிராந்திய அதிகாரிகளும் இருக்கிறார்கள்.[103]
பம்பாய் உயர்நீதிமன்றத்தின் இருப்பிடமாகவும் மும்பை விளங்குகிறது. பம்பாய் உயர்நீதிமன்றம் மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளான தமன் மற்றும் தியூ மற்றும் தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆகியவற்றின் சட்ட பிரச்சனைகளைக் கவனிக்கிறது.[105] இரண்டு கீழ் நீதிமன்றங்களான, உள்ளூர் விஷயங்களுக்கான சிறு பிரச்சனை நீதிமன்றம் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கான குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றையும் மும்பை கொண்டிருக்கிறது.[106] நகரத்தில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் மற்றும் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கும் மக்களுக்கான ஒரு சிறப்பு தடா (பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள்) நீதிமன்றமும் மும்பையும் உள்ளது.[107]
போக்குவரத்து
முதன்மை கட்டுரை: Public transport in Mumbai
மும்பை புறநகர் ரயில்வே, [[பம்பாய் மின்சார வினியோகம் போக்குவரத்து|BEST]] பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோ ரிக்சாக்கள், படகு சவாரி மற்றும் விமான போக்குவரத்து ஆகியவை மும்பையில் உள்ள பொது போக்குவரத்து அமைப்புமுறையில் உள்ளடங்கி உள்ளன.[108] கருப்பு மற்றும் மஞ்சள் நிற மீட்டர் பொருத்தப்பட்ட டாக்சிகள் மாநகரம் முழுவதும் பயணிக்கின்றன.[109] ஆட்டோரிக்சாக்கள் மும்பையின் புறநகர் பகுதிகளில் மட்டும் இயங்குகின்றன.[110] இயற்கை எரிவாயுவில் இயங்கும் டாக்சிகளும், ஆட்டோரிக்சாக்களும் வாடகை போக்குவரத்தின் மிக பொதுவான வடிவங்களாக உள்ளன.[111]இந்திய தேசிய நெடுஞ்சாலை முறையின் தேசிய நெடுஞ்சாலை 3, தேசிய நெடுஞ்சாலை 4 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 8 ஆகியவற்றால் மும்பை பயன்பெற்று வருகிறது.[112] மும்பை-வோடோதரா விரைவு நெடுஞ்சாலை கட்டப்பட்டு வரும் நிலையில்,[113] மும்பை-புணே விரைவு நெடுஞ்சாலை தான் இந்தியாவில் இதுவரை கட்டப்படாத வகையிலான முதல் விரைவு நெடுஞ்சாலை ஆகும்.[114]
மும்பை இரண்டு ரெயில்வே மண்டலங்களின் தலைமையிடமாக விளங்குகிறது: சத்ரபதி சிவாஜி டெர்மினஸை[108] மையமாக கொண்ட மத்திய ரெயில்வே மற்றும் சர்ச்கேட்டிற்கு அருகில் தலைமையிடத்தைக் கொண்ட மேற்கத்திய ரெயில்வே.[115] நகர போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் மும்பையின் புறநகர் ரெயில்வே, வடக்கு-தெற்கு திசையில் நகரத்தின் நீளத்திற்கு மூன்று தனித்தனி வலையமைப்புகளைக் கொண்டுள்ளது.[81]
மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் முக்கிய விமான போக்குவரத்து மையமாகவும், இந்தியாவின் ஓய்வில்லாத விமான நிலையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.[127] ஜூஹூ விமான இறங்குதளம் இந்தியாவின் முதல் விமானநிலையமாகும். தற்போது இது பிளையிங் கிளப் மற்றும் ஹெலிபோர்ட் வசதியை அளிக்கிறது.[128] கோப்ரா-பவில் பகுதியில் உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கும் நவி மும்பை சர்வதேச விமானநிலையத்திற்கு அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதுடன், தற்போது இருக்கும் விமான நிலையத்தின் அதிகரித்து வரும் போக்குவரத்து சுமையைக் குறைக்கவும் உதவும்.[129]
அதன் பிரத்யேக இட அமைவுடன், உலகின் சிறந்த இயற்கை துறைமுகங்களில் ஒன்றாக மும்பை விளங்குகிறது.[130] இது நாட்டின் பயணிகள் போக்குவரத்தில் 60 சதவீதத்தையும், இந்திய சரக்கு கையாள்கையில் பெரும்பாகத்தையும் கையாள்கிறது.[3] இது இந்திய கப்பற்படைக்கு ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது, மேலும் மேற்கத்திய கப்பற்படையின் பிரிவின் தலைமையிடமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.[131] படகுகள் மூலமான படகு சவாரி இந்த பகுதிகளில் உள்ள தீவுகளையும், கடல்களையும் அணுக உதவுகிறது.[132]
பிற பயனுள்ள சேவைகள்
இதனையும் பார்க்க: Mumbai's water sources
BMC 6 ஏரிகளில் இருந்து நகரத்திற்கு குடிநீர் வினியோகம் செய்கிறது.[133][134] இதன் பெரும்பகுதி துள்சி மற்றும் விஹார் ஏரிகளில் இருந்து வருகிறது.[64] தான்சா ஏரி மேற்கத்திய புறநகர்களுக்கும், மேற்கத்திய ரெயில்வேயுடன் தீவு நகரத்தின் ஒரு பகுதிகளுக்கும் தண்ணீர் வினியோகிக்கிறது.[135] ஆசியாவின் மிகப்பெரிய குடிநீர் சுத்திகரிப்பு ஆலையான பன்ந்தப்பில்[135] சுத்திகரிக்கப்படுகிறது.[136] இந்தியாவின் முதல் நிலத்தடி குடிநீர் குழாய் மும்பையில் உருவாக்கப்பட்டுள்ளது.[137] ஏறத்தாழ மும்பையின் அனைத்து தினசரி கழிவும் சேர்த்தால் 7,800 மெட்ரிக் டன்னாகும், இதில் 40 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள்9}[324] வடமேற்கில் உள்ள கோரை, வடகிழக்கில் உள்ள முலுண்ட் மற்றும் கிழக்கில் உள்ள தியோனர் ஆகியவற்றின் நிலங்களில் குவிக்க கொண்டு செல்லப்படுகின்றன.[138] வோர்லி மற்றும் பாந்த்ராவில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது, இது முறையே பாந்த்ரா மற்றும் வோர்லியில் உள்ள 3.4 km (2.1 mi) மற்றும் 3.7 km (2.3 mi) ஆகிய இரண்டு பிரத்யேக கடல்வழி வெளிதடுப்புகளில் வெளியேற்றப்படுகின்றன.[139]பிரிஹன்மும்பை மின் வினியோகம் மற்றும் போக்குவரத்து (BEST) தீவு நகரம் எடுக்கும் 3,216 GWh[140] மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. மேலும் ரிலையன்ஸ் எனர்ஜி, டாட்டா பவர் மற்றும் மஹாவிட்ரானினால் (மஹாராஷ்டிரா மாநில மின்சார வினியோக நிறுவனம்) புறநகர்களுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. உற்பத்திதிறனை விட மின்சார நுகர்வு அதிவேகமாக வளர்ந்து வருகிறது.[141] 2000 வரை பிக்சட் லைன் மற்றும் செல்லுலர் சேவைகளை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் மட்டுமே கொண்டிருந்த அரசுத்துறையான எம்டிஎன்எல், மிகப்பெரிய தொலைபேசி சேவை அளிக்கும் நிறுவனமாக விளங்குகிறது. இது பிக்சட் லைன் மற்றும் மொபைல் டபிள்யூஎல்எல் சேவைகளையும் வழங்குகிறது.[142] செல்போன் கவரேஜ் மிக சிறப்பாக உள்ளது, இதில் வோடாபோன் எஸ்ஸார், ஏர்டெல், எம்டிஎன்எல், பிபிஎல் குழுமம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஐடியா செல்லுலார் மற்றும் டாடா இன்டிகாம் ஆகியவை முக்கிய சேவை அளிப்பு நிறுவனங்களாக உள்ளன. ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ ஆகிய இரண்டு சேவைகளும் நகரில் வழங்கப்படுகின்றன.[143] எம்டிஎன்எல் மற்றும் ஏர்டெல் இரண்டும் பிராட்பேண்ட் சேவையும் வழங்குகின்றன.[144][145]
மக்கள்தொகை கணக்கியல்
இதனையும் பார்க்க: Growth of Mumbai and Mumbai statistics
[காட்டு]Population Growth |
---|
இந்துக்கள் (67.39%), முஸ்லீம்கள் (18.56%), பௌத்தர்கள் (5.22%), ஜெயின் (3.99%) மற்றும் கிறித்தவர் (3.72%) உள்ளிட்டவர்கள் மும்பையில் மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இவர்களுடன் சீக்கியர்களும் மற்றும் பார்சியர்களும் மீதமிருக்கும் மக்கள்தொகையில் அடங்கியுள்ளனர்.[153] மொழி/இன அடிப்படையிலான மக்கள்தொகையியல்: மராத்தியர் (53%), குஜராத்தியர்கள் (22%), வட இந்தியர்கள் (17%), தமிழர்கள் (3%), சிந்திகள் (3%), துளுவர்கள்/கன்னடர் (2%) மற்றும் பிறர்.[154] இந்த பிரத்தியேக கலாச்சார கலவையானது, 1600களில் இருந்து இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் குடிபெயர்ந்ததால் ஏற்பட்டதாகும்.[155] போர்ச்சுகீசியர்களால் மதம் மாற்றப்பட்ட மராத்தி பேசும் கிழக்கு இந்திய கத்தோலிக்கர்கள் தான் தாய்நாட்டு கிறித்தவர்கள் ஆவார்கள்.[156]
இந்தியாவிலுள்ள பிற மாநகரங்களைப் போலவே மும்பையும் அதிகளவிலான பன்மொழியாளர்களைக் கொண்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் உத்தியோகப்பூர்வ மொழியான மராத்தி, பரவலாக பேசப்படுகிறது. இந்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவை பேசப்படும் பிற மொழிகளாகும்.[157] பம்பையா என்று வழங்கப்படும் பேச்சுவழக்கு இந்தியானது, மராத்தி, இந்தி, இந்திய ஆங்கிலம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பிற வார்த்தைகளின் கலவையாக தெருக்களில் பேசப்படுகிறது. ஆங்கிலம் பெருமளவில் பேசப்படுகிறது, மேலும் நகரத்தின் வெள்ளை காலர் பணிக்குழுக்கள் மத்தியில் இது முதன்மை மொழியாக இருக்கிறது.[158]
வளரும் நாடுகளில் உள்ள விரைவாக வளரும் பல நகரங்களில் காணப்படும் முக்கிய நகரமய பிரச்சனைகளில் மும்பையும் பாதிக்கப்படுகிறது: பெருமளவிலான மக்களிடையே நிலவும் பரவலான வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை, பொது சுகாதாரமின்மை மற்றும் நகர்புற நிர்வாகம் மற்றும் கல்வித்தரமின்மை ஆகியவை. உயர்மதிப்பில் கிடைத்திருக்கும் இடத்தில், மும்பை வாழ்மக்கள் பொதுவாக தடைபட்ட, அதிக செலவிலான, பொதுவாக பணியிடங்களில் இருந்து வெகு தூரத்தில் வசிக்கிறார்கள். இதனால் நெரிசல் மிகுந்த போக்குவரத்தில் அல்லது தடைகள் மிகுந்த சாலையில் நீண்டதூரம் பிரயாணிக்க வேண்டியுள்ளது.[159] 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மும்பை மக்களில் 54.1 சதவீதத்தினர் சேரிகளில் வாழ்கிறார்கள்.[160] ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய சேரியான[161] தாரவி, மத்திய மும்பையில் அமைந்துள்ளது. அதில் 800,000 மக்கள் வசிக்கிறார்கள்.[162] சேரிகளும் கூட சுற்றுலா கவர்ச்சிகளாக மும்பையில் வளர்ந்து வருகின்றன.[163][164][165] 1991-2001 வரையிலான தசாப்தத்தில் மஹாராஷ்டிராவிற்கு வெளியில் இருந்து மும்பைக்கு புலம்பெயர்ந்தோர்களின் எண்ணிக்கை 1.12 மில்லியனாக இருந்தது. இது மும்பையின் மொத்த மக்கள்தொகையை 54.8 சதவீதம் நிகர கூடுதல்களுக்கு வழிவகுத்தது.[166] 2007ல், மும்பையில் குற்ற விகிதம் (இந்திய பெனல் கோட்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள்) 1,00,000 மக்களுக்கு 186.2 ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 175.1 என்ற அளவை விட சற்றே அதிகமாகும், ஆனால் ஒரு நாட்டில் ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் 312.3 என்ற சராசரி குற்ற விகிதத்தை விட சற்றே குறைவாகும்.[167] இந்நகரத்தின் முக்கிய சிறைச்சாலை ஆர்தர் சாலையில் உள்ளது.[168]
மக்களும், கலாச்சாரமும்
முதன்மை கட்டுரை: Mumbai culture
மும்பை வாழ்மக்கள் தங்களைத் தாங்களே மும்பைக்கர் , மும்பையைட் அல்லது பாம்பேயைட் என்று அழைக்கின்றனர். மும்பையின் புறநகர் மக்கள் தெற்கில் அமைந்துள்ள முக்கிய வர்த்தக மாவட்டத்திற்கு பயணிக்க கணிசமான நேரத்தை செலவிடுகின்ற போதிலும், பெரும்பாலான மக்கள் மும்பையின் ரெயில் அல்லது பேருந்து போக்குவரத்து அமைப்பிற்கு அருகிலேயே வசிக்கிறார்கள்.[80] சில பிரத்யேக உணவு வகைகளில் தன்சக், {2கிச்ரி{/2}, போம்லி படாட்டா பாஜி,காமாக் காக்ரி, சொலாசி கடி,மின் வேலா கர்ரி மற்றும் கரீட் பம்பாய் டக் ஆகியவை உள்ளடங்கும்.[169] சாலையோர திண்பண்டங்களில் கிடைக்கும் உணவு வகைகளில் வடா பாவ், பானிபூரி, பாவ் பாஜி மற்றும் பேல்பூரி ஆகியவை கிடைக்கின்றன.[170] இந்நகரம் பல சிறிய தென்னிந்திய, பஞ்சாபி மற்றும் சீன உணவு வகைகள் அளிக்கும் உணவுவிடுதிகளையும் கொண்டுள்ளது.[171]அரசாங்க ஆதரவிலான கலை அரங்குகள் மற்றும் தனியார் வர்த்தக அரங்கங்கள் இரண்டிலும் சமகாலத்திய கலைகள் நன்கு வெளிப்படுகின்றன. ஜஹாங்கீர் கலையரங்கம் மற்றும் நவீன கலைகளுக்கான தேசிய கலையரங்கம் ஆகியவை அரசு ஆதரவிலான கலையரங்கங்களாகும்.[179] 1833ல் உருவாக்கப்பட்ட ஆசியாடிக் சொசைட்டி ஆப் பாம்பே என்பது நகரத்தில் இருக்கும் மிகப் பழமை வாய்ந்த பொது நூலகமாகும்.[180] சத்ரபதி சிவாஜி மஹாராஜ் வாஸ்து சங்க்ரஹாலியா (உத்தியோகப்பூர்வ தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம்) என்பது இந்திய வரலாற்றின் அரியான பண்டைய காட்சிப்பொருள்களைக் கொண்ட தெற்கு மும்பையில் உள்ள ஒரு புதிய கண்காட்சி சாலையாகும்.[181] ஒரு பூங்காவையும் கொண்ட ஜிஜாமதா உத்யான் (உத்தியோகப்பூர்வ விக்டோரியா கார்டன்ஸ்) என்று பெயரிடப்பட்ட மிருக காட்சிசாலையையும் மும்பைக் கொண்டிருக்கிறது.10}[419]
சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் எலிபண்டா குகைகள் ஆகிய இரண்டு பாரம்பரிய யுனெஸ்கோ இடங்களை மும்பை கொண்டுள்ளது.[182] நரிமன் பாயிண்ட், கிர்ஹாம் சௌபாத்தி, ஜூஹூ பீச் மற்றும் மரைன் டிரைவ் ஆகியவை நகரத்தின் பிற பிரபல சுற்றுலா தளங்களாகும்.[183][184] ஓர் தீம் பார்க் மற்றும் புத்துணர்வூட்டும் இடமாக விளங்கும் எஸ்செல் வோல்டு, கோரய் கடற்கரைக்கு அண்மையில் அமைந்துள்ளது.[185] ஆசியாவின் மிகப்பெரிய தீம் வாட்டர் பார்க்கான வாட்டர் கிங்டம் என்பது இந்நகரில் அமைந்துள்ளது.[186]
மும்பை வாழ் மக்கள் மேற்கத்திய மற்றும் இந்திய விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி, ஹோலி, ஈத், கிறிஸ்துமஸ், நவராத்திரி, புனித வெள்ளி, தசரா, மொஹரம், விநாயக சதுர்த்தி, துர்க்கா பூஜை மற்றும் மகா சிவராத்திரி ஆகியவை நகரத்தின் சில பிரபல விழாக்கள் ஆகும்.[187] இசை, நடனம், தியேட்டர் மற்றும் திரைப்பட துறைகளில் கலைஞர்களின் படைப்புகளை உள்ளடக்கிய காலா கோடா கலை விழா என்பது ஓர் உலக கலைகளின் கண்காட்சியாகும்.[188] ஒரு வாரம் காலம் கொண்டாடப்படும் பாந்த்ரா திருவிழா என்பது எல்லா மக்களாலும் கொண்டாடப்படுகிறது. மும்பையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பான்கங்கா டேங்க்கில் மஹாராஷ்டிரா சுற்றுலா அபிவிருத்தி கழகத்தால் ( MTDC) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பான்கங்கா விழா என்ற இரண்டு நாள் விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.[189] எலிபெண்டா தீவுகளி்ல் ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் கொண்டாடப்படும் எலிபெண்டா விழாவானது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தீவுக்கு வரும் கலைஞர்களுடன் பாரம்பரிய இந்திய நடனம் மற்றும் இசைக்காக அர்பணிக்கப்படுகிறது.[190]
மும்பை பின்வரும் நகரங்களுடன் துணை நகர உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது:[97]
[191]
ஊடகங்கள்
இதனையும் பார்க்க: List of Mumbai radio stations
மும்பையில் பல்வேறு பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் மற்றும் ரேடியோ நிலையங்களும் உள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியா , மிட் டே , ஹிந்துஸ்தான் டைம்ஸ் , டிஎன்ஏ மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட பிரபல ஆங்கில செய்தி பத்திரிக்கைகள் மும்பையில் பிரசுரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மாராத்திய செய்தி பத்திரிக்கைகளில் லோக்சத்தா , லோக்மத் மற்றும் மஹாராஷ்டிரா டைம்ஸ் ஆகியவை உள்ளடங்கும். பிற இந்திய மொழிகளிலும் செய்தி இதழ்கள் வெளியாகின்றன.[194] ஆசியாவின் மிகப் பழமைவாய்ந்த பாம்பே சமாச்சார் பத்திரிக்கையின் தலைமை இடமாகவும் மும்பை விளங்குகிறது. இப்பத்திரிக்கை 1822ல் இருந்து குஜராத்தி மொழியில் பிரசுரிக்கப்பட்டு வருகிறது.[195] முதல் மராத்திய செய்தி பத்திரிக்கையான பாம்பே தர்பன் , 1832ல் மும்பையில் பால்சாஸ்திரி ஜம்பேகரினால் தோற்றுவிக்கப்பட்டது.[196]கட்டண தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒன்றின் மூலமாகவோ அல்லது உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி சேவையளிப்போர் மூலமாகவோ பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச தொலைக்காட்சி சேனல்களை மும்பையில் காணலாம். பல்வேறு செய்தி சேனல்கள் மற்றும் அச்சு பிரசுரங்கள் பெருமளவில் இருப்பதால், இந்த மாநகரம் பல்வேறு சர்வதேச ஊடக பெருநிறுவனங்களின் மையமாக விளங்குகிறது. தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான தூர்தர்ஷன் இரண்டு இலவச சேனல்களை வழங்குகிறது[197], அதே வேளை மூன்று முக்கிய கேபிள் வலையமைப்புகள் பெரும்பாலான வீடுகளுக்கு சேவை வழங்குகின்றன.[198] ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ மராத்தி, ஈடிவி மராத்தி, டிடி சாஹ்யாத்ரி, மீ மராத்தி, ஜீ டாக்கிஸ், ஜீ டிவி, ஸ்டார் பிளஸ் ஆகியவற்றுடன் ஸ்டார் மஜ்ஹா போன்ற புதிய சேனல்களும் மிக பிரபலமாக உள்ளன. மும்பை மற்றும் மஹாராஷ்டிராவிற்காக மட்டும் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட செய்தி அலைவரிசைகளில் ஸ்டார் மஜ்ஹா, ஜீ 24 டாஸ் மற்றும் சஹாரா சாமே மும்பை போன்றவை உள்ளடங்கும். செயற்கோள் தொலைக்காட்சி (டிடிஎச்), அதன் உயர்ந்த நிறுவும் செலவுகளால் இன்னும் பெருந்திரளான வரவேற்பைப் பெறவில்லை.[199] டிஷ் டிவி மற்றும் டாடா ஸ்கை போன்றவை மும்பையின் முக்கிய டிடிஎச் பொழுதுபோக்கு சேவைகளாக உள்ளன.[200] பண்பலை வரிசையில் ஒன்பது ரேடியோ சேவைகளுடனும், ஏஎம் வரிசையில் மூன்று அனைத்திந்திய வானொலி ஒலிபரப்புகளும் சேர்த்து மொத்தம் பன்னிரெண்டு ரேடியோ ஒலிபரப்புகள் மும்பையில் இயங்கி வருகின்றன.[201] மேலும் வோல்டுஸ்பேஸ், சைரெஸ் மற்றும் எக்ஸ்எம் போன்ற வர்த்தக ஒலிபரப்பு சேவை அளிப்போர்களும் மும்பையில் உள்ளனர்.[202] மத்திய அரசாங்கத்தால் 2006ல் தொடங்கப்பட்ட கன்டிஷனல் அக்சஸ் சிஸ்டம், அதற்கிணையான ஒளிபரப்பு சேவையான டைரக்டு-டூ-ஹோம் தொழில்நுட்பத்தின் போட்டியால் சரியான வரவேற்பை பெறவில்லை.[203]
மும்பையை மையமாக கொண்டுள்ள இந்தி திரைப்படத்துறையான பாலிவுட், ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 150-200 திரைப்படங்களைத் தயாரிக்கிறது.[204] பாலிவுட் என்ற பெயர் பம்பாய் மற்றும் ஹாலிவுட் என்பதின் இணைப்புச் சொல்லாகும். 2000 ஆண்டுகளில், பாலிவுட் வெளிநாடுகளில் நல்ல வளர்ச்சியைக் கண்டது. இது தரம், ஒளிப்பதவி மற்றும் புதிய கதைகளிலும், அத்துடன் சிறப்பு தோற்றங்கள் மற்றும் அனிமேஷன் போன்ற தொழில்நுட்ப அபிவிருத்திகளிலும் திரைப்பட தயாரிப்பைப் புதிய உயரத்திற்கு இட்டு சென்றது.[205] திரைப்பட நகரம் உட்பட கோரேகாவ்வில் உள்ள ஸ்டூடியோக்கள், பெரும்பாலான திரைப்பட அரங்கங்களுக்கான இடமாக இருந்தன.[206] மராத்திய திரைப்பட தொழில்துறையும் மும்பையை மையமாக கொண்டே செயல்பட்டு வருகிறது.[207]
மும்பையில் தமிழ்நாட்டு மக்கள் அதிக அளவில் பல வருடங்களாக வசித்து வருவதால், அவர்கள் மும்பை நகர செய்திகளை தங்கள் தாய்மொழியில் தெரிந்துக்கொள்வதற்காக தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட பல்வேறு தமிழ் நாளிதழ்கள் மும்பையிலேயே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
கல்வி
மும்பையில் உள்ள பள்ளிகள் "முனிசிப்பல் பள்ளிகள்" (BMCஆல் நடத்தப்படுபவை)[208] அல்லது தனியார் பள்ளிகளாகவே உள்ளன. இவை சில விதயங்களில் அரசிடமிருந்து நிதி உதவிகளைப் பெறுகின்றன[209]. இந்தப் பள்ளிகள் மகாராஷ்டிரா மாநில வாரியமான MSBSHSE, இந்திய பள்ளி சான்றிதழ் பரீட்சைக்கான அனைத்திந்திய கழகம் (CISCE) அல்லது இடைநிலை கல்விக்கான மத்திய ஆணையம் (CBSE) ஆகியவற்றில் ஏதோவொன்றால் அங்கீகரிக்கப்படுகின்றன[210]. மராத்தி அல்லது ஆங்கிலம் பொதுவான பயிற்று மொழியாக உள்ளது. அரசால் நடத்தப்படும் பொது பள்ளிகள் பல்வேறு வசதிகளில் பின்தங்கி உள்ளன, ஆனால் தனியார் பள்ளிகளின் பெரும் செலவுகளை ஏற்க முடியாத ஏழைகளுக்கு இது மட்டுமே ஒரு வாய்ப்பாக உள்ளன.[211].10+2+3/4 திட்டத்தின் கீழ், மாணவ, மாணவியர் பத்தாண்டு கால பள்ளிப்படிப்பை முடிக்கின்றனர்[212]. பின்னர் அவர்கள் இரண்டு ஆண்டு ஜூனியர் கல்லூரியில் சேர்கின்றனர். அங்கு அவர்கள் கலை, வர்த்தகம் அல்லது விஞ்ஞானம் ஆகிய மூன்றில் ஒரு துறையைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துறையில் ஒரு பொதுவான பட்டப்படிப்பு தொடரப்படுகிறது அல்லது சட்டம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற உத்தியோக படிப்பு தொடரப்படுகிறது.[213]. பட்டப்படிப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையி்ல் உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ் பெரும்பாலான கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன[214]. இந்தியாவின் முக்கிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளிகளான இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை[215], வீர்மாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப பயிலகம் (VJTI)[216] மற்றும் யூனிவர்சி்ட்டி இன்ஸ்டியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி (UICT) மற்றும் SNDT பெண்கள் பல்கலைக்கழகம் ஆகியவை மும்பையில் உள்ள பிற தன்னாட்சி பல்கலைக்கழகங்களாகும்[217]. மேலாண்மை கல்விக்கான ஜம்னாலால் பஜாஜ் பயிலகம் (JBIMS), கே. ஜெ. சோமைய்யா இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் அண்டு ரிசர்ச் (SIMSR), எஸ். பி. ஜெயின் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் ஆகியவையும் மற்றும் பல பிற மேலாண்மை பள்ளிகளும் கூட மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன[218]. இந்தியாவின் மிக பழமையான சட்டம் மற்றும் வர்த்தக கல்லூரிகளான முறையே அரசு சட்டக்கல்லூரி மற்றும் சிடென்ஹாம் கல்லூரியும் மும்பையில் அமைந்துள்ளன[219][220]. சர் ஜெ. ஜெ. ஸ்கூல் ஆப் ஆர்ட் என்பது மும்பையின் மிகப் பழமையான கலை பயிலகமாகும்[221].
அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா பயிலகம் (TIFR), மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆகிய இரண்டு முக்கிய ஆராய்ச்சி பயிலகங்களும் மும்பையில் அமைந்துள்ளன[222]. டிராம்பேயில் உள்ள தன் ஆலையில் 40 மெகாவாட் அணு ஆராய்ச்சி உலையான சைரஸ் அணு உலையை (CIRUS) BARC இயக்குகிறது[223].
விளையாட்டு
கிரிக்கெட் , (நாட்டிலும்) நகரத்திலும் மிகப் பிரபலமான விளையாட்டாக இருக்கிறது.[224] மைதானங்களின் பற்றாக்குறையால், எங்கும் அது பல்வேறு மாற்றப்பட்ட வடிவங்களில் (பொதுவாக அது கல்லி கிரிக்கெட் என்று குறிப்பிடப்படுகிறது) விளையாடப்படுகிறது. இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் (BCCI) இருப்பிடமாகவும் மும்பை விளங்குகிறது.[225] இந்நகரின் சார்பாக ரஞ்சிக் கோப்பையில் மும்பை கிரிக்கெட் அணி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அத்துடன் எந்த குழுவும் வெல்லாத அளவிற்கு, அது 38 முறை ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ளது.[226] இந்நகரம் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ்களாலும், இந்திய கிரிக்கெட் லீக்கில் மும்பை சேம்ப்களாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. இந்நகரில் வங்காடே மைதானம் மற்றும் பிராபோர்ன் மைதானம் எனும் இரண்டு சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன.[227] மும்பையில் இருந்து வந்த தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர்[228] மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளடங்குவார்கள்.[229]கால்பந்தாட்டமும் (சாக்கர்) இந்நகரத்தின் பிற பிரபல விளையாட்டுக்களில் ஒன்றாக விளங்குகிறது. FIFA உலக கோப்பையின் போது மும்பையில் பரவலாக பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும்.[230] ஐ-லீக்கில், மும்பை FC,[231] மகேந்திரா யுனைடெட்[232] மற்றும் ஏர்-இந்தியா ஆகிய மூன்று அணிகளால் மும்பை பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.[233] கிரிக்கெட்டின் எழுச்சியால், பீல்டு ஹாக்கி தன் பிரபலத்தன்மையை இழந்துவிட்டிருக்கிறது.[234] மும்பை மராத்திய வீரர்களின் மையமாகவும் விளங்குகிறது, மகாராஷ்டிராவில் உள்ள வெகு சில அணிகளில் ஒன்றான இது ப்ரீமியர் ஹாக்கி லீக்கில் (PHL) போட்டியிடுகிறது.[235] ஒவ்வொரு பிப்ரவரியிலும், மகாலக்ஷ்மி ரேஸ்கோர்சில் மும்பை டெர்பி போட்டிகளை நடத்துகிறது. மும்பையில் உள்ள டர்ஃப் கிளப்பில் பிப்ரவரியில் மெக்டொவல்ஸின் டெர்பி போட்டியும் நடத்தப்படுகிறது.[236] சமீபத்திய ஆண்டுகளில் பார்முலா 1 ரேசிங் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது,[237] 2008ல், போர்ஸ் இந்தியா F1 அணியின் கார் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது.[238] 2004 மார்ச்சில், மும்பை கிராண்ட் பிரிக்ஸ், F1 பவர்போட் உலக சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருந்தது.[239] 2004ல், இந்திய மக்களிடையே விளையாட்டு ஒழுக்கத்தைக் கொண்டு வர ஓர் உடன்படிக்கை மூலம் வருடாந்திர மும்பை மாரத்தான் - உருவாக்கப்பட்டது.[240] 2006 முதல், ஏடிபி வோல்டு டூரின் ஓர் சர்வதேச சுற்றுத் தொடரான தி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் டென்னிஸ் ஓபனிலும் மும்பை களமிறங்கியது.[241]
Comments
Post a Comment