Posts

Showing posts from October, 2018

டாப் சிலிப்” தமிழகத்தின் இயற்கை எழில் மிகுந்த இடம்.

"டாப் சிலிப்" தமிழகத்தின் இயற்கை எழில் மிகுந்த இடம்.  மேற்கு தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பெருக்கும் மிகுந்த பத்து இடங்களில் இதுவே முதன்மையானது. 1800-1900-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்த மலையிலிருந்த ஏராளமான தேக்கு மரங்கள் வெட்டி இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மொட்டைக் காடாக கிடந்த இந்த மலைத்தொடருக்கு 1917-இல் வந்த ஆங்கிலேயே வனத்துறை அலுவலரான ஹூகோ வுட் என்ற IFS அலுவலர், இந்த மலைப்பகுதியை மறு சீரமைப்பு செய்யும் நோக்கில் நீலாம்பூர் தேக்கு மரக்கன்றுகளை இந்த மலையில் நடவு செய்துள்ளார். இன்று ஆனைமலை புலிகள் சரணாலயம் மற்றும் பரம்பிக்குளம் புலிகள் சரணாலய பகுதியில் இருக்கும் பல இலட்சம் தேக்கு மரங்களும் ஹூகோ வுட் அவர்களால் நடப்பட்டது. இந்த மலைப்பகுதியில் மரம் நடுவதை மட்டுமே வேலையாக கொண்டிருந்த ஹூகோ வுட் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனக்கென சொத்து எதையும் சேர்த்து வைக்கவில்லை. கடைசிவரை உலாந்தி பள்ளத்தாக்கில் உள்ள மவுன்ட் ஷ்வாட்ஸ் என்ற பெயருடைய வீட்டில் வசித்து வந்தவர் தனது 63-வது வயதில் மரணமடைந்துள்ளார். அவரது உடல் உலந்தி பள்ளத்தில் உள்ள ஹூகோ வுட் இல்லத்துக்கு...

அழகு முத்துக் கோன் தமிழ் பாளையக்கரர?தெலுங்குப் பாளையக்காரா?வரலாறு சொல்லும் உண்மை என்ன?-

அழகு முத்துக்கோன்...!  அருள்நிலா. 2018.09.15 அழகு முத்துக் கோன் தமிழ் பாளையக்கரர?தெலுங்குப் பாளையக்காரா?வரலாறு சொல்லும் உண்மை என்ன?- அழகு முத்துக்கோன் ஒரு பாளையக்காரன் அல்ல.எட்டையாபுரம் தெலுங்குப் பாளையக்காரன் எட்டப்பநாயக்கனிடம் படைவீரனாக செயல்பட்டார்.கான்சாகிப் என்ற யூசுப்கானால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அழகுமுத்துக்கோன் தமிழரே .-R Shunmugaraj  தூய தமிழரை தன்னினமாக்கி தமிழரை அழிப்பதை வாடிக்கையாக கொண்டது வடுக இனம்..அழகுக்கோன் இனம் தமிழினம். - தமிழ்நாடு தமிழர் கூட்டாட்சி =============================================================== { “இவ்வளவு காலமாக,அழகு முத்துக்கோன், அழகான தமிழ்ப் பெயராக இருக்கிறதே, தமிழனாக இருப்பான் என்று நினைத்தேன். ஆனால், நேற்றுத்தான் (2018.09.13) அவன் வரலாறு படித்தேன். அவன் ஒரு பச்சைத் தெலுங்கன்! இதில் என்ன வியப்பு என்றால், அவன் அப்பன் பெயர் ‘முத்து’. இவன் பெயர் ‘அழகு முத்து’.முத்து என்பவன் விசய நகரத்திலிருந்து வருகிறான். அப்ப, அங்கு வரைக்கும் தமிழ்ப்பகுதியாகவே இருந்திருக்கிறது.இன்றும் பல அழகிய தமிழ்ப் பெயர்களை தெலுங்கர்கள் கொண்டுள்ளார்கள்...”-அருட்க...

திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்?’ இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 497 என்ன தான் சொல்கிறது

மனைவியின் காதலனை கணவன் புகார் கொடுத்து தண்டிக்கமுடியும். ஆனால், கணவனின் காதலி மீது மனைவி புகார் கொடுத்து கணவனையும் தண்டிக்கமுடியாது; கணவனின் காதலியையும் தண்டிக்கமுடியாது. இதுதான், 497 சட்டப்பிரிவின் முரண்பாடு. அதாவது, இந்திய அரசிலைமைப்பு சட்டம் ஆர்ட்டிக்கிள்- 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. ஆர்டிக்கிள்-15  பாலின பாகுபாடு கூடாது என்கிறது. ஆர்ட்டிக்கிள்-21 தனிமனித பாதுகாப்பு, சுதந்திரத்தை வலியுறுத்துகிறது. இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூன்று உரைகற்களையும் வைத்து இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 497 உரசிப்பார்க்கும்போது… இச்சட்டப்பிரிவு தங்கம் இல்லை. பித்தளையாக பல்லிளிக்கிறது. இது, தெரியாமல் என்னமோ இப்போது 497 சட்டப்பிரிவை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தபிறகுதான், கணவன் மீது மனைவி புகார் கொடுக்கமுடியாது என்று நினைத்துக்கொண்டு சென்னை எம்.ஜி.ஆர். நகர் ஜான்பால் ஃப்ராங்ளின் என்பவர் திருமணத்தை தாண்டிய உறவை தொடர்வேன் என்று சொல்ல… இனி காவல்துறையால் ஒன்றும் செய்யமுடியாது என்று தவறாக நினைத்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் அவரது மனைவி புஷ்பலதா. ஆனால், குடும்ப வன்முறைச் சட...

சாதிய ஒழிக்காமல் புரட்சியை நிகழ்த்த முடியாது ?..

சாதிய ஒழிக்காமல் புரட்சியை நிகழ்த்த முடியாது...ஆகையால், முதலில் சாதியை ஒழிப்போம் என்று கூறும் கருத்து வரலாற்று பார்வையில்லாத, குறைபாடுடைய கருத்து.... இந்த அமைப்பிற்குள்ளேயே, இந்த அரசின் கீழேயே சாதியை ஒழித்துவிட முடியுமென்று நம்புகிறவர்கள் பெரியாரிஸ்டாக, அம்பேட்கரிஸ்டாக, கம்யூனிஸ்டாக பிரகடனம் செய்து கொண்டாலும். சாதிக்கும், இந்தியாவில் நிலவுகிற அமைப்புக்கும் தொடர்பு, இந்தியாவில் நிறுவப்பட்டிருக்கிற அரசு குறித்தும் கவலைப்படாமல் சொல்லுகிற மேம்போக்கான கருத்து... சாதியின் கொடூரத்தை உணராமல் உதிர்க்கிற சோம்பேறித்தனமான கருத்து.. நடைமுறையில் இருக்கிற அமைப்பு பிரிட்டிஷ் காலத்தில் தன்னுடைய நிர்வாக தேவைக்காக லேசாக நெகிழ்ந்து கொடுத்திருந்தாலும், சுவாசிக்க இடம் கொடுத்திருந்தாலும், சாதியை ஒழிப்பது அதன் நோக்கம் கிடையாது, ஒழிக்கவும் செய்யாது.. அம்பேட்கர் பிரிட்டிஷாரை நோக்கி அதைத்தான் சொன்னார்....அதே விதி நடப்பிலிருக்கிற ஆளும் வர்க்கத்திற்கும் பொருந்தும்.. அதை மீறி, வாங்க கைல மை வைக்கலாம்னு யாராது சொன்னா... உங்க வாய்ல...........விரல் வச்சிருக்கீங்கன்னு நினைச்சிருக்காங்கன்னு அர்த்தம்..... வரலாற்று...

ஆதார் எங்கு அவசியம் ? எதற்கு அவசியம் இல்லை ?..

ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஆதார் பல முக்கியமான விஷயங்களுக்கு அவசியம் இல்லாமல் போய் இருக்கிறது. பொதுமக்களுக்கு ஆதார் எண் கட்டாயமா என்று வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய ஐந்து நீதிபதிகளின் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.[வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம்] இதில் ஆதார் பாதுகாப்பானது. ஆதார் அட்டையை அரசு பணிகளுக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளார். இதன் காரணமாக பின்வரும் விஷ்யங்களுக்கு ஆதார் தேவைப்படுகிறது. ஆதார் எங்கு அவசியம்? 1)ஆதார் அட்டையை அரசு பணிகளுக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். அரசு சார்ந்த திட்டங்களில் பெற ஆதார் அவசியம் ஆகும். 2)பான் கார்ட் பெற ஆதார் கட்டாயம். 3)மத்திய, மாநில அரசு வகுத்து இருக்கும் திட்டங்களுக்கும் ஆதார் அவசியம். 4)ரேஷன் கடைகளில் ஆதார் அவசியம் 5)சமையல் காஸ் மானியம் பெற ஆதார் அவசியம். 6)வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் அவசியம் ...

பரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி!

பரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி! பல படங்களை "இது படம் அல்ல பாடம்" என்று பொதுவாகச் சொல்வோம் அவற்றையெல்லாம் பொய்யாக்கி உண்மையிலேயே இது தான் "படம் அல்ல பாடம்!" என்று போற்றும் வகையில் திரையில் ஒரு புரட்சி தான் தம்பி மாரி செல்வராஜ் இயக்கி, வெளிவந்துள்ள 'பரியேறும் பெருமாள்' திரைப்படம். தம்பி மாரி செல்வராஜின் அனுபவம், வயது இவற்றையெல்லாம் தாண்டிய ஒரு ஆகச்சிறந்த படைப்பாக வெளிவந்துள்ளது. தான் சொல்லவந்த கருத்தை அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்போம்; அதற்காகக் காட்சிகளைத் திணிப்பது சத்தமான உரையாடல்களைப் பேசுவது அப்படியெல்லாம் இல்லாமல் அவனுடைய வலியை அனைவருக்கும் கடத்தியிருப்பதால் தான் இது ஆகச்சிறந்த படைப்பு! இப்படத்தைப் பார்க்கின்றபோது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய 'சிண்ட்லர்ஸ் லிஸ்ட்' (Schindler's List) திரைப்படத்தை அவருடைய யூத இனம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை உணர்த்துவதற்காக எடுக்கிறார். அப்படத்தைப்பார்த்த ஹிடலரின் வம்சாவழியினர் எல்லோரும் எங்கள் முன்னோர்கள் இவ்வளவு கொடுமையானவர்களா? என்று எண்ணி திரையரங்கைவிட்டு வெளிவரும்போது வெ...

ஃபாசிசம், ஃபாசிஸ்ட் என்றால் என்ன?

ஃபாசிசம், ஃபாசிஸ்ட் என்றால் என்ன? "ஃபாசிசம்" "ஃபாசிஸ்ட்" என்ற சொற்கள் இரண்டு நாட்களாக தமிழ் கூறும் நல்லுலகில் அனல் பறந்து கொண்டிருக்கின்றன. அப்படி என்றால் என்ன? Fascism என்ற கோட்பாட்டை உருவாக்கியவர் இத்தாலி நாட்டின் முன்னாள் அதிபரும், சர்வாதிகாரியுமான "பெனிட்டோ முசோலினி". இவரது கோட்பாட்டின்படி ஃபாசிசம் என்பது மூன்று அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டது. 1 . "Everything in the state". "எல்லாமே அரசுதான். இதன்படி அனைத்து வகைகளிலும் அரசே உச்சபட்ச தலைமை. அதற்கு ஈடான வேறு எந்த சக்தியும் கிடையாது. அதிபர் வைப்பதே சட்டம். எதிர்த்துக் குரல் அல்ல சிந்திக்கக்கக்கூடக் கூடாது. 2."Nothing outside the state". "அரசுக்கு வெளியே எதுவுமில்லை" நாடு முன்னேற்றம் பெற வேண்டும். இந்த உலகை ஆள்வதற்கு ஃபாசிச கோட்பாட்டைப் பின்பற்றும் நாடுகளோடு ஒத்துச்செல்லவேண்டும். இதற்கு ஒவ்வொரு தனிமனிதரும் தம்மை அரசின் நலனுக்காக அர்ப்பணம் செய்யவேண்டும். 3."Nothing against the state". "அரசுக்கு எதிராக எதுவும் கூடாது" அரசை நோக்கி எப்படிப்பட்ட...

வ உ சியின் சுதேசி கப்பல் என்னாச்சு... யாரும் சொன்னார்களா?

வ உ சியின் சுதேசி கப்பல் என்னாச்சு... யாரும் சொன்னார்களா?  நான் சொல்கிறேன். வ.உ.சி. அவர்கள் வாங்கிய  எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ். லாவோ கப்பல்களில் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள், 1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தது. தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு 4 அணா கட்டணம் மட்டுமே சுதேசி கப்பலில் வசூலிக்கப் பட்டது. ஆனால் ஆங்கிலக் கம்பெனியோ 4 ரூபாய் வசூலித்தது. மேலும் சரக்கு மூட்டைகளுக்கும், லக்கேஜூக்கும் தனிக்கட்டணமும் வசூலித்தது. கட்டணம் மிகக் குறைவாக இருந்ததாலும், சுதேசிக் கப்பல் என்றும் மக்கள் கருதியால் சுதேசிக் கப்பலுக்கு மகத்தான ஆதரவளித்தனர். நட்டத்தில் மூழ்கிய ஆங்கிலக் கப்பல் தனது கட்டணத்தை 1 ரூபாயாகவும், பின்னர் 4 அணாவாகவும், குறைத்த பிறகும் கூட்டம் வராததால் #கட்டணமின்றி ஏற்றிச் செல்வதாக அறிவித்தது. அப்பொழுதும் மக்கள் ஆதரவு இல்லாததால் வ வு சியை வளைக்கத் திட்டமிட்டது ஆங்கில கம்பெனி. கடைசியில் வ உ சிக்கு ஒரு லட்சம் #லஞ்சம் தருவதாக பேரம் பேசிப் பார்த்தது. இதற்கும் மடியாததால் பழி தீர்க்க மு...

சம்பளத்தை கேட்டதால் சாதிவெறிபிடித்த கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அருந்ததியர்கள் மீது கொடூர தாக்குதல்.

சம்பளத்தை கேட்டதால் சாதிவெறிபிடித்த கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அருந்ததியர்கள் மீது கொடூர தாக்குதல்.நியாயம் கேட்டு ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் மறியல் செய்ததினால் காவல்துறை தாக்குதல்.. Source - Dalit Camera Gouden's are a dominant caste in Western parts of Tamil Nadu. Even the present Chief Minister of Tamil Nadu is from this particular caste. In western part the major source of income is agricultural and weaving apart from others. The caste discrimination is rampant in these districts and hardly a dalit movement has emerged. In this background an arundhathiyar (Dalit) in Kannuvukarai village of Annur town ask the gounden in whose land the dalit labourer worked. The gounden did not pay the salary and delayed it for 3 months. The dalit labourer approached the police but they were silent. The gounden gave his goat to the dalit labourer and asked him to keep until he returns the money. the next day the gounden along with others tied the dalit labourer and beat him bla...

தந்தை பெரியார் கண்ட போராட்டங்களும் போராட்ட உத்திகளும்

தந்தை பெரியார் கண்ட போராட்டங்களும் போராட்ட உத்திகளும் திராவிடம்  பெரியார்  பெண்ணுரிமை  தீண்டாமை தந்தை பெரியார் 17.09.1879இல் பிறந்தார். அவர் 140ஆம் பிறந்த நாள் 17.9.2018 திங்கள் அன்று வருகிறது. periyyar 450அவரைப் பின்பற்றும் தொண்டர்களும் எல்லாத் தமிழர்களும் இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் அவருடைய கொள்கைகளால்-உழைப்பால் -தொடர்ந்து அவர் நடத்திய போராட்டங்களால் பயன் பெற்றுள்ளனர். 1919 ஆகத்துக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். “காங்கிரசு பதவி ஏற்கும் காலத்தில், 100 அரசு வேலைகளில் 50 வேலைகளைப் பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கித் தரும் என்கிற உறுதிமொழியைக் காங்கிரசு ஏற்கவேண்டும்” என 1919 முதல் 1925 வரை போராடினார். அவர் இயல்பிலேயே எந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும், அக் கொள்கையில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார். தம் துணை வியார் நாகம்மையாரையும் ஈடுபடுத்திக் கொண்டார். காட்டாக, 1921 செப்டம்பர் 25 காலை 6 மணிக்கு, காந்தியார் ஈரோட்டுக்கு வந்து அவர்தம் இல்லத்தில் மாடியில் தங்கினார். அங்கு ஈ.வெ.ரா. மற்றும் முதன்மையானவர்களு...

ஒரு பஞ்சாயத்துக்கு ஆண்டுக்கு 50லட்சம் முதல் 1.5கோடி வரை மத்திய மாநில அரசுகளின் நிதி வருகிறது... எனில் உங்கள் கிராமத்திற்கு?

 ஒரு பஞ்சாயத்துக்கு ஆண்டுக்கு 50லட்சம் முதல் 1.5கோடி வரை மத்திய மாநில அரசுகளின் நிதி வருகிறது... எனில் உங்கள் கிராமத்திற்கு? https://accountingonline.gov.in/ReportAbstract.do?OWASP_CSRFTOKEN=ZSFL-C09W-RSCD-75L1-DJPT-3RME-5LUB-4BN7&method=openAnnualReport&target=topband&help=0 Or 1. accountonline.gov.in 2. Mas register (8format) 3. Annual receipt and payments மேற்கண்ட லிங்க் மூலம் (கணினியில் மட்டும்) உங்கள் கிராம வரவு செல்வு கணக்கினை அறிந்துகொள்ளுங்கள். இந்த லிங்க் மூலம் உங்கள் பகுதி கிராமத்தின் வரவு செலவு கணக்கினைத் தெரிந்துகொள்ளலாம். உங்கள் கிராமத்திற்கு மத்திய மாநில நிதிகள் இத்தனை லட்சங்கள் வந்துள்ளதா என வியந்துதான் போவீர்கள். இந்த லிங்கினை உங்கள் போனில் சாதாரணாமகத் திறக்க முடியாது. கணினி அல்லது போனில் Setting சென்று desktop view மூலம் மட்டுமே பார்க்க முடியும். அக்- 2, கிராமசபைக் கூட்டம். உங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரையும் கலந்துகொள்ளச் சொல்லுங்கள்.  உங்கள் கிராமம் தங்களுக்குத் தேவையானவற்றை தீர்மானமாக இயற்றி, வேண்டியதைக் கேட்காமல் விட்டுவிட்டால் அந்த ...

திராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே?

திராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே? எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன் பிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018 வெளியிடப்பட்டது: 22 செப்டம்பர் 2018 திராவிடம்  தலித்... இந்தியச் சமூகம் ஒரு சாதியச் சமூகம் மட்டுமன்று. அது படிநிலை ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட சமூகமும் ஆகும் என்பார் அம்பேத்கர். அது ஒரு தந்திரமான வஞ்சகமான ஏற்பாடு. எனவே, பயன்களையும் மேல்படியில் உள்ளோர் சற்று முன்கூட்டிப் பெற்றிடும் வாய்ப்பு இருக்கவே செய்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதே வேளையில், திராவிட இயக்கமும், ஆட்சியும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்பது அவதூறு. அதில் உண்மையில்லை. அரசுப் பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்ய இருந்த தடையை நீக்கியதும், தாழ்த்தப்பட்ட மக்களைக் கோயிலுக்குள் சுயமரியாதை இயக்கம் அழைத்துச் சென்றதும் 1930களுக்கு முன்னால் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவர் ( நீதிபதி வரதராஜன் ) நீதிபதியாக அமர்த்தப்பட்டது, தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான். அ...

சபரிமலை - ஆர்எஸ்எஸ் நிலைப்பாடே தீபக் மிஸ்ரா தீர்ப்பு டி.எஸ்.எஸ். மணி

சிறப்புப் பார்வை: ஆர்எஸ்எஸ் நிலைப்பாடே தீபக் மிஸ்ரா தீர்ப்பு டி.எஸ்.எஸ். மணி சபரிமலை கோயிலுக்குள் பத்து வயது முதல் ஐம்பது வயது வரை உள்ள பெண்கள் செல்லக் கூடாது என்ற, புழக்கத்தில் இருந்த தடையை உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தங்கள் தீர்ப்பு மூலம் நீக்கினார்கள். 1991ஆம் ஆண்டில் கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பாக உயர்த்திப் பிடிக்கப்பட்ட அந்தத் தடையை இப்போது உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம், உச்ச நீதிமன்ற நீதியசர்கள், சமூக அமைப்பின் ஏற்றத்தாழ்வுகளைப் போக்கத் தீர்ப்புகளை வழங்கி, அதன் மூலம் சமூகத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் மக்கள் மத்தியிலோ, ஒரு குறிப்பிட்ட பாலினம் மத்தியிலோ வந்துவிடக் கூடாது என்பதில் அக்கறையுடன் இருப்பதையே காட்டியிருக்கிறார்கள். ஆனால், வலதுசாரிக் கருத்துக்கள் நாட்டில் இந்தத் தீர்ப்பை எதிர்க்கின்றன என்பதும், இந்தத் தீர்ப்பை எதிர்த்துச் சிலர் மேல் முறையீடு செல்லப்போகிறார்கள் என்பதுவும் ஊடகங்களில் செய்திகளாக வருகின்றன. இந்த நேரத்தில், எல்லோராலும் மேற்கோள் காட்டப்படும், அல்லது முற்போக்காளர்கள் என்று தங்களை நினைத்துக்கொள்பவர்களால் குற்றம் சாட்டப்படும், ஆர்எஸ்எஸ்...

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு  ✊✊                         தமிழ்நாட்டில் இருக்கின்ற மேல் ஜாதி என்று சொல்கின்ற மூப்பனார், செட்டியார் ஆந்திராவில் இல்லை, ஆந்திராவில் மேல் ஜாதி என்று சொல்கின்ற ரெட்டி, நாயுடு கர்நாடகாவில் இல்லை, கர்நாடகாவில் மேல் ஜாதி என்று சொல்கின்ற கவுடா கேரளா வில் இல்லை. கேரளாவிலுள்ள நாயர், குஜராத்தில் இல்லை, குஜராத்தில் உள்ள படேல் ஒரிஸா வில் இல்லை, ஒரிஸாவில் உள்ள பட்நாயக் உத்தர பிரதேசத்தில் இல்லை,  உத்தரப்பிரதேசத்திலுள்ள யாதவா காஷ்மீரில் இல்லை, காஷ்மீரிலுள்ள ஜாதவா பீகாரில் இல்லை, பீகாரில் உள்ள யாதவ் பஞசாபில் இல்லை, பஞ்சாபிலுள்ள ஜாட் இமாச்சல், அஸ்ஸாம், மணிப்பூரில் கிடையாது. ஆனால் இயற்கையை வழிபட்டு வந்த பௌத்த பேர ரசரான அசோகர் வாரிசுதார ர்களாகிய நாகரீக பண்பாட்டு சிந்தனையாளராகிய பாபாசாகேப் அம்பேட்கர் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட நாகலோக மக்களான  பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடி இன மக்களாகிய நாம் இல்லாத இடமே இந்தியாவில் கிடையாது. ஏன்னா நாம் தேசிய இனம். இன்றைய இந்த தமிழ் இன தேசமாகிய காஷ்மீர் முதல் கன்னி...

கடவுளே....

உலகத்தை பாயாக சுருட்டியதை காப்பாற்றிய இந்து கடவுளே. இரவையும் , பகலையும் படைத்தேன் என சொல்லும் ஏசு கிறிஸ்து கடவுளே. ஒவ்வொரு பொருளும் , உயிரும் என்னாலே உருவானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்த அல்லா கடவுளே. இந்த குழந்தைகளுக்கு பசி மயக்கம் இல்லாமல் இருக்க படைத்து இருந்தால் நாங்களும் வணங்குவோம். உங்களை ...                                   முகநூலில் : மல்லை தி வி க

பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய கருத்தியல் ஆயுதங்கள் உண்டு..

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று கூறும் பைபிளை எரித்து உன் வீரத்தை காட்டுவதை விட....... உன் ஜாதிக்காரனை #அர்ச்சகன் ஆக விடாமல் வைத்திருக்கானே அவனிடம் காட்டு உன் வீரத்தை........ ஆண்களும் பெண்களும் குடும்பமாக ஆராதிக்கும் ஆலயத்தை சேதப்படுத்தி உன் வீரத்தை காட்டும் நீ....... #சபரிமலையில் உன் மனைவி, அக்கா, அம்மா, தங்கையோடு சென்று ஐயப்ப தரிசனம் செய்து உன் #வீரத்தை #காட்டு..... ஆலைய இறைமக்களுக்கு திருவிருந்து பரிமாறும் போதகர்களை மிரட்டி உன் வீரத்தை காட்டும் நீ............ உன் கோவில் #குருக்களோடு #சரி #சமமாக #அமர்ந்து உணவு உண்டு உன் வீரத்தை காட்டு........... இது எல்லாம் உன்னால் செய்ய முடியவில்லை என்றால் நீயே உன்னை கொழுத்து.......... ஏனென்றால் நீ வாழ தகுதி இல்லாதவன். "கிறிஸ்தவம் என்பது மதவெறியில் வாழ்வதல்ல; கிறிஸ்தவம் என்பது மனத்தாழ்மையில் வாழ்வது." ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிருத்தவ பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..???? இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்....??? அவைகளில் சிலவற்றை நாம் என்னவெ...