‘தீண்டப்படாதோர்’, ‘அட்டவணைச் சாதியினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ இவர்களில் யார் தலித்?

‘தீண்டப்படாதோர்’, ‘அட்டவணைச் சாதியினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ இவர்களில் யார் தலித்?

தீண்டப்படாதோர்’, ‘அட்டவணைச் சாதியினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்இவர்களில் யார் தலித்?
Arunthati Roy book - Annihilation of Caste - released March 2014
Arunthati Roy book – Annihilation of Caste – released March 2014
இன்று இணைதளத்தில் இப்படியொரு குறிப்பு படிக்க நேர்ந்தது. “இந்திய இழிவு” கட்டுரையில் அருந்ததிராய் கீழ்க்கண்டவாரு சொல்கிறார், என்று ஒரு நண்பர் குறிப்பிட்டுள்ளார் : “இன்றைய இந்திய அறிவாளிகள் கூட வெளிப்படுத்தத் தயங்கும் உணர்வு நடையில் அம்பேத்கர் 1945இல் எழுதினார்: ‘தீண்டப்படாதோருக்கு இந்து மதம் கொடூர அரங்காய்த் திகழ்கிறது.’ ஓர் எழுத்தாளர் சக மனிதர்களை வர்ணிப்பதற்கு ‘தீண்டப்படாதோர்’, ‘அட்டவணைச் சாதியினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ போன்ற பதங்களைப் பயன்படுத்த வேண்டியிருப்பது கொடூர அரங்கில் வாழ்வதை ஒத்ததே. அம்பேத்கர் ‘தீண்டப்படாதோர்’ என்னும் சொல்லைத் தயக்கமேதுமின்றி ஆழ்ந்த கோபத்துடன் பயன்படுத்திய காரணத்தால், நானும் அதையே செய்வேன். இன்று ‘தீண்டப்படோதோர்’ என்னும் சொல்லுக்கு மாற்றாக ‘தலித்’ (‘குலைந்துபோன மக்கள்’) என்னும் மராத்தியச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல்லோ ‘அட்டவணைச் சாதியினர்’ என்பதற்கு மாற்றீடாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அறிஞர் ரூப விஸ்வனாத் குறிப்பிடுவது போல் சரியான நடைமுறையன்று. ஏனென்றால் தலித் என்னும் பதத்துக்குள் சாதிக் கொடுமைகளிலிருந்து தப்பிக்க மற்ற மதங்களுக்கு மாறிய (என் கிராமத்தில் கிறித்துவத்துக்கு மாறிய பறையர் போன்ற) தீண்டப்படாதோரும் அடங்குவர். ஆனால் இவர்கள் ‘அட்டவணைச் சாதியினர்’ பதத்தில் அடங்க மாட்டார்கள். இப்படிக் கேடான ஒன்றுக்குப் பெயர்சூட்டும் சடங்கு ஒரு பக்கம் இருக்க, இந்த முயற்சியுங்கூட மூட அதிகாரிகளின் கோப்புக் குறிப்புகள் போன்று குழப்பமிக்கதாய் உள்ளது. இதைத் தவிர்ப்பதற்கு நான் எப்போதும் இல்லா விட்டாலும் பெரும்பாலும் கடந்தகாலம் தொடர்பாக எழுதுகையில் ‘தீண்டப்படோதோர்’ என்ற சொல்லையும், நிகழ்காலம் பற்றி எழுதுகையில் ‘தலித்’ என்ற சொல்லையும் பயன்படுத்துகிறேன். நான் மற்ற மதங்களுக்கு மாறிய தலித்துகள் பற்றி எழுதுகையில் தலித் சீக்கியர்கள், தலித் முஸ்லிம்கள் அல்லது தலித் கிறித்துவர்கள் எனக் குறிப்பிட்டு எழுதுகிறேன்.”,என்று ஒரு பிளாக்கில் குறிப்பிட்டிருந்தது[1]. சரி, என்ன விசயம் என்று வழக்கம்  போலா ஆராய்ந்து பார்த்தேன். பழைய விசய்ம் என்றாலும், இப்பொழுது எழுப்பப் பட்டுள்ளதாலும், இவ்விசயத்தைப் பற்றி எப்பொழுது வேண்டுமானாலும், விவாதிக்கலாம் என்பதாலும், இதைப் பற்றிய விவரங்களை பதிவு செய்கிறேன்.
Ramalingam-Arundhati Roy cannot hide from Hyderabad without answering.
Ramalingam-Arundhati Roy cannot hide from Hyderabad without answering.
தலித் அறிவிஜீவிகள் அருந்ததி ராயை எதிர்த்தது ஏன்?: “ஜாதியை ஒழித்துக் கட்டுவது எப்படி?” என்ற அம்பேத்கரின் புத்தகம், அருந்ததி ராய் எழுதிய முன்னுரை மற்றும் குறிப்புகளுடன் “மஹாத்மாவுக்கு ஒரு பதில் என்ற விதத்தில் நாராயண பதிப்பகத்தாரால் 2014ல் வெளியிடப்பட்டது[2]. அப்பதிப்பகம் தன்னுடைய இணைதளத்திலேயே பல விவரங்களைக் கொடுதுள்ளது[3]. ஹைதராபாதில் மார்ச்.9, 2014 அன்று நடக்கவிருந்த அப்புத்தக வெளியீட்டு விழா தலித்துகள் எதிர்ப்பார்கள்[4] என்ற அச்சத்தினால், ரத்து செய்யப்பட்டது[5]. தலித் அடிப்படைவாதிகள் அல்லது தீவிரவாதிகள் (Dalit Radicals), அருந்ததி ராய் அம்பேத்கரைப் பற்றி எழுத விரும்பவில்லை என்றும் கட்டுரைகள் உள்ளன[6]. அப்புத்தகம் தடை செய்யப் படவேண்டும் என்றும் சில தலித் இயக்கங்கள் குரல் எழுப்பின. மேலும் அந்த அருந்ததி ராய்-நாராயண திட்டம், ஒரு பார்ப்பன சதி என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது[7]. அருந்ததி ராய், அம்பேத்கரை விட காந்தியைப் பற்றி முன்னுரையில் அதிகமாக எழுதியிருக்கிறார், மாவோயிஸ சித்தாத்திக்கு அம்பேத்கரைப் பற்றி எழுத முடியுமா,ஆம்பேத்கரைப் பற்றி எழுத அவருக்குத் தகுதி இருக்கிறதா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர்[8]. அருந்தியின் பேட்டி[9] மற்றும் கட்டுரை[10] அவர்களால் எதிர்க்கப்பட்டன. காந்தியைப் பற்றிய அவரது எழுத்துகளை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது அருந்ததியை எதிர்க்க வெறென்ன காரணம் இருந்தது என்று புரியாமல் தான் இருந்தது[11]. “தலித்” அறிவுஜீவிகள் ஒட்டு மொத்தமாக எதிர்த்தபோது, ஆதரவு, முஸ்லிம்-ஆதரவு இணைதளத்திலிருந்து வந்திருப்பது சிந்திக்க வைப்பதாக இருக்கிறது[12].
அருந்ததி ராய் எதிப்பு
அருந்ததி ராய் எதிப்பு
அருந்ததி ராய் –உயர்ஜாதி பெண்மணி என்று விமர்சிக்கப்பட்டது: முன்னுரையின் கடைசியாக, “தங்களை புரட்சியாளர் என்று கூறிக்கொள்பவர்கள் பிராமணிஸத்தை அடிப்படைவாதத்துடன் விமர்சித்தாலொழிய ஜாதியை அழித்துவிட முடியாது”, என்று குறிப்பிட்டது அவர்களை சீண்டியுள்ளது. இதனால், “ஒருவேளை ஜாதியை ஒழிப்பது எப்படி போன்ற விசயங்களை வெளிநாட்டுக்காரர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னால், இவர் தன்னுடைய உயர்ஜாதி பழக்கவழக்கங்கள் மற்றும் சலுகைகள் முதலியவற்றைக் காட்டிக் கொண்டே (தன்னுடைய பெயரில் ஜாதி அடையாளத்தை எப்பொழுதும் காட்டிக்கொண்டிருப்பதைப் பொல்ல) தலித் அரசியலுக்கு பங்களிக்கலாம்”, என்று முரளி சண்முகவேலன் என்பவர் நக்கலடித்து எழுதியுள்ளார்[13]. அப்புத்தகம் [The Doctor and the Saint] அம்பேத்கருக்கோ அல்லது தலித்துகளுக்கோ பயனுள்ளதாக இல்லை, மாறாக அவருக்கு பயனுள்ளதாக இருக்கலாம். அவருடைய செயல், ஒரு நவீன உலக ஏழ்மையான பெரும்பணக்காரன், உலகம் முழுவதும் பறந்து சென்று தன்னுடைய சேவைகளை ஏழ்மையினை குறைக்க செய்யும் முறையைப்போலத்தான் உள்ளது என்றும் கிண்டலடித்துள்ளார்[14].
தி டாக்டர் அன்ட் தி செயின்ட் புத்தகம்
தி டாக்டர் அன்ட் தி செயின்ட் புத்தகம்
அருந்ததி ராய் பதில் அளித்தது[15]: “தலித் கேமரா” என்ற பெயரில் மார்ச்.15, 2014 அன்று அருந்ததி ராயுக்கு “ஒரு திறந்த கடிதம்” என்று கேள்விகள் கேட்டு வெளியிடப்பட்டது[16]. அதற்கு அடுத்த நாளே அவர் பதிலளித்தார், “என்னுடைய முன்னுரையில் உள்ள பல விசயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளன. “செயின்ட்” போன்ற வார்த்தைகளை, அம்பேத்கர் எப்படி “மஹாத்மா”ஆன்ற வார்த்தையை உபயோகித்தாரோ, அவ்வாறே, நான் உயர்வு-நவிற்சியில் உபயோகப்படுத்தியுள்ளேன்……மஹர்கள் தான் அம்பேத்கரைப் பற்றி நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள், அதுபோல தலித்துகள் தான் அப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதமுடியும், மற்றவர் எழுதக் கூடாது என்ற வாதத்தை நான் மறுக்கிறேன்…. அதனால், நாளைக்கு பனியாக்கள் தாங்கள் தான் காந்தியைப் பற்றி எழுதலாம் அல்லது தலித்துகள் அம்பேத்கரைப் பற்றி எழுதக் கூடாது என்று சொல்லமுடியுமா?….அம்பேத்கர் தனது புத்தகத்தில் சமஸ்கிருத சுலோகங்களை மொழிபெயர்ப்பு இல்லாமல் கொடுத்துள்ளார். அதற்கு மொழிபெயர்ப்பைச் சேர்த்துள்ளேன். புரிந்து கொள்வதற்கு விளக்கம் கொடுத்துள்ளேன், இவையெல்லாம் குற்றமாகி விடுமா?…நான் ஜாதி-எதிப்பு கோணத்தில் தான் முன்னுரையில் எழுதியுள்ளேன்”.
Annihilation of the Caste - Ambedkar 1936 -Columbia University
Annihilation of the Caste – Ambedkar 1936 -Columbia University
ஜாதி எதிர்ப்பு, ஜாதி ஆதரவு இரட்டை நிலைப்பாடு: அம்பேத்கர் ஒரு புரட்சியாளராகவும் இருந்து, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் தந்தையாகவும் இருப்பது முரண்பாடாக உள்ளது என்று சிலரால் சுட்டிக்காட்டப்பட்டது[17]. அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவிய போதும், அது நிர்ணயச் சட்டத்தின் 25வது பிரிவில் இந்து-ஜைன-பௌத்த-சீக்கிய என்று ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளதை சிலர் எடுத்துக் காட்டினர்[18]. குறிப்பாக ஆங்கிலத்தில் உள்ள அவரது சொற்றொட்ர்கள், சொல்லாடல்கள், முதலியவை விமர்சனத்திற்கு உள்ளாகியது[19]. அவரது நவீன, மேற்கத்தைய பொருளாதார கொள்கைகள் ஆதரிப்பு அதிகமாகவே சட்டப்பட்டது. “நவீன வாழ்க்கை, நகர நாகரிகம் முதலியவை தலித்துகளை மாற்றியமைக்கலாம், ஆனால், அவர்கள் பட்ட துன்பங்கள், கொடுமைகள் முதலியவற்றின் வடுக்கள் மறைந்து விடாது…………..இந்நாட்டு தொழிற்முறைகள் மறைந்தது, அடித்தட்டு ஜாதிகளை அதிகமாகவே பாதித்திருக்கின்றது………..” போன்ற கருத்துகள் எடுத்துக் காட்டப்பட்டன[20]. ஏற்கெனவே, “காரவன்” என்ற பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை, (அருந்ததியின் முன்னுரை முழுவதும் உள்ளது) சர்ச்சயினை கிளப்பி விட்டது[21]. குறிப்பாக காந்தி மற்றும் அம்பேத்கர் உரையாடல்களில் உள்ள வர்ணாஸ்ரமம் மற்றும் ஜாதிமுறை விவாதத்திற்கு உரியதாக இருக்கிறது. ஜாதியை ஒழிப்போம் என்று சொல்லிக் கொண்டு, எல்லா கட்சிகளும் ஜாதி அடிப்படையில் தான் எல்லாவற்றையும் செய்து வருகின்றன என்ற உண்மைதான், கடந்த 67 ஆண்டுகளாக கவனிக்கப்பட்டு வருகிறது.
© வேதபிரகாஷ்
07-01-2015
[2] A Reply To The Mahatma– Excerpted from Annihilation of Caste: The Annotated Critical Edition, published by Navayana, New Delhi.B.R. AMBEDKAR
[4] “……And yes, the launch was cancelled by Navayana for a number of reasons, including an SMS that was circulated that said: “Save Ambedkar writings. Oppose Navayan publication. Annihilation of Caste is our holy book. Arundhati Roy and Anand. S contaminated it. Participate in the protest on 9th March at Sundaraiah Vigynana Kendram, Hyderabad.” From Arunthati’s letter.
[5] Strangely, some Dalit radicals and intellectuals have a problem with Arundhati Roy reading, learning from and expounding about Ambedkar. On March 9, Roy was to be in Hyderabad to launch the book. But the event was cancelled because the publisher feared protests from Dalit radicals who have been upset about the book.
[7] அப்பிரசுரத்தின் நாராயணன் என்ற இளைஞர் ஒரு பிராமணர் என்பதால், அவ்வாறு கூறப்பட்டது.
[8] In other words, Dalit intellectuals think it is their right, by virtue of their caste, to decide whether a Maoist sympathiser can write on Ambedkar; whether one can write on the Ambedkar debate with Gandhi; or whether one is allowed to write more words in criticism of Gandhi than in praise of Ambedkar.
[13] A t the end of her introduction, she says caste cannot be annihilated “unless those who call themselves revolutionary develop a radical critique of Brahminism.” She could contribute more to Dalit politics by reflecting on her own everyday upper caste practices and privileges (such as the ever-present caste identity in her name) before introducing Annihilation of Caste to ‘foreigners’.
[14] In The Doctor and the Saint, neither Ambedkar nor the Dalits, but solely Roy appears to be the only beneficiary of this project. Her life, be it in her activism or this book, appears, to me, chillingly similar to a neoliberal ‘poverty baron’ who flies around the world offering her services to reduce poverty.
[17] Using the Constitution as a subversive object is one thing. Being limited by it is quite another. Ambedkar’s circumstances forced him to be a revolutionary and to simultaneously put his foot in the door of the establishment whenever he got a chance to. His genius lay in his ability to use both these aspects of himself nimbly, and to great effect. Viewed through the prism of the present, however, it has meant that he left behind a dual and sometimes confusing legacy: Ambedkar the Radical, and Ambedkar the Father of the Indian Constitution.
[18] அதனால் தான், எஸ்.சி மதம் மாறினால், அச்சலுகை பறிபோகிறது என்பதனைப் புரிந்து கொள்ளாமல், தலித் போர்வையில், மற்ற இயக்கங்கள், மதம் மாறியவர்களுக்கும் அச்சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டு வருகின்றன.
[20] இவை சுததேசி அல்லது இந்துத்துவக் கொள்கைகளைப் போலிருப்பதும் கவனிக்கத் தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி