Posts

Showing posts from July, 2018

பெரியாரை ஏன் மதிக்கிறேன்?

P A Krishnan  ஈவேராவை ஏன் பெரியார் என்று அழைக்கிறீர்கள் என்று பல நண்பர்கள் கேட்கிறார்கள். நான் அவரை உண்மையாக மதிக்கிறேன், அதானால்தான் என்பதுதான் எனது பதிலாக இருந்திருக்கின்றது. பெரியாரின் மீது எனக்குக் கடுமையான விமரிசனங்கள் இருக்கின்றன. அவருடைய கொள்கைகள் பிராமணர் அல்லாத இடைத்தட்டு சாதிகளுக்கே உதவி செய்தன என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ஆனால் அவர் மனத்தளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம்தான் இருந்தார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. தூத்துக்குடித் துப்பாக்கி சூட்டில் 13 பேர்கள் இறந்து விட்டனர். தமிழகத்தில் இது நடந்திராத ஒன்று என்று கூறப்படுகிறது. ஆனால் சுதந்திரம் அடைந்த முதல் ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக கொடிய அடக்குமுறை அவிழ்த்து விடப் பட்டது என்பது பலர் அறிந்திராத ஒரு தகவல். காங்கிரஸ் அரசாங்கம் புரட்சி என்ற சொல்லையே வேரோடு இந்தியாவிலிருந்து அகற்ற வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தது. கம்யூனிஸ்டுகள் அந்தக் காலகட்டத்தில் எடுத்த நிலைப்பாடு தவறு என்று இன்று தெரிந்தாலும், அன்று கம்யூனிஸ்டு இயக்கத்திற்காக பல தோழர்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். 1944லேயே தொழிற்சங்கத...

இந்திய மொழிகளிலேயே முதன் முதலில்அச்சு_வடிவம்_பெற்றது_தமிழ் #மொழி

#இந்திய_மொழிகளிலேயே_முதன் #முதலில்_அச்சு_வடிவம்_பெற்றது_தமிழ் #மொழி.  இந்தப் பெருமையை தமிழுக்கு தந்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த மதபோதகர் #சீகன்பால்க். #இந்தியாவில்_கிறிஸ்தவ_மத_போதனை செய்வதற்காக டென் மார்க் மன்னர் நான்காம் ஃபெடரிக் கால் அனுப்பி வைக்கப்பட்டவர் சீகன்பால்க். இதன்படி, 1706-ம் ஆண்டு ஜூலை 9-ல் தரங்கம்பாடி வந்து சேர்ந்தார் சீகன்பால்க். இவர் மன்னரின் நேரடி தூதுவராக அனுப்பிவைக்கப்பட்டதை அப் போதைய ஆளுநர் ஹாசியுஸ் விரும்பவில்லை. அதனால், சீகன்பால்க்கை கப்பலில் இருந்து அழைத்து வர படகை அனுப்ப மறுத்தார். 3 நாட்கள் கழித்து கரை வந்து சேர்ந்த சீகன்பால்க், தொடர்ந்து ஆளுநரால் உதாசீனப் பட்டதால் சேரி பகுதியில் தங்கி இருந்து இறைப்பணி செய்ய ஆரம்பித்தார். #தமிழ்_கற்றால்தான்_இந்த_மக்களிடம் #இறைப்பணி_செய்ய_முடியும் என்பதை அனுபவத்தால் உணர்ந்த சீகன்பால்க், தரங்கம்பாடி, பொறையாறு பகுதிகளில் இருந்த திண்ணைப் பள்ளிகள் மூலமாக தமிழைப் படித்தார். முதலியப்பன், அழகப்பன் என்ற தமிழ் நண்பர்க ளின் உதவியோடு ஒரே ஆண்டில் தமிழ் கற்றுத் தேர்ந்தவர், தமது மொழிபெயர்ப்பாளரான அலப்பூ என்பவர் மூலம் ஐயாயிரம் தமிழ் வார...

ஊடகத்துறை Media

Image
Source :-https://tamiljournalism.wordpress.com தமிழ் தளத்தில் ஊடகவியல் – மக்களுக்கான ஊடகமும்-ஊடகவியலும் ஊடகம் என்றால் என்ன? பொதுவாக ஊடகம் என்றால் கடத்துவது, காவுவது என்று தமிழில் அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஒரு செப்புக்கம்பி ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு மின்சாரத்தை கடத்திச் செல்லும் போது அது அங்கே ஒரு ஊடகமாகச் செயற்படுகிறது.அதே போல ஒருவர் பேசும்பேச்சை,மற்றவர் கேட்பதற்கு அதை ஒலி அலைகளாகச் சுமந்து செல்லும் காற்று ஊடகமாகச் செயற்படுகிறது. ஊடகவியல் என்கிறபோது அது மனிதர்களுக்கிடையி;ல் கருத்துக்களை –தகவல்களை காவிச் செல்கின்ற -பரப்புகின்ற வேலையைச் செய்கின்ற தொடர்பாடல் சம்மந்தப்பட்ட துறையைக் குறிக்கிறது என்று சாதாரணமாகச் சொல்லலாம். குறிப்பாகச் சொல்வதானால் கருத்தியலை கட்டமைப்பது,மனிதர்களினதும் சமுகத்தினதும் இருப்பை தீர்மானிப்பது, சந்தைப் பொருளாதாரத்தின் இருப்பை தீர்மானிப்பது,அரசியல் தத்துவம் விஞ்ஞானம் சட்டம் மருத்துவம் பொறியியல் என்று பல்துறை சார்ந்த விடயங்களில் தீர்மானகரமான சக்தியாக விளங்குவது என்று ஊடகவியலில் சர்வ வியாபகத் தன்மையை விளக்கலாம். ஊடகவியலின் செயற்பாடு முதல்க...